Friday 15 September 2017

அவர் எனது மாமா!


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

ரகுபதியின் ஒரே மகள் மீனா. அம்மா இறந்துவிட்டார். மீனாவிற்கும் முன்பின் அறிமுகம் இல்லாத முரளிக்கும் திருமணம் நடந்தது.

முதலிரவிற்காக ஹோட்டல் போகும் வழியில் மீனா தனது காதலனுடன் கம்பி நீட்டிவிட்டாள்.

செய்வதறியாது திகைத்தான் முரளி.

செய்தி கேட்ட ரகுபதிக்கு ஹார்ட் அற்றாக். வைத்தியசாலைக்கு விரைந்தார்கள். அவருடன் வைத்தியசாலையில் நிற்பதற்கு ஒருவர் தேவை என்றார்கள்.


முரளி ’நான் நிற்கின்றேன்’ என்றான்.

No comments:

Post a Comment