Sunday 22 April 2018

கங்காருப் பாய்ச்சல்கள் (28)


மின் இணைப்பு

அவன் அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தான். வீட்டின் முன்புறத்தில் ஒருவர் கார் கழுவிக் கொண்டிருந்தார்.

|பெரியவரே, நீங்கள் எந்தக் கம்பனியின் மின் இணைப்பைப் பாவிக்கின்றீர்கள்?|

ஈரம் சொட்ட நின்ற அந்த வீட்டு மனிதர், அந்தப் பையனை நிமிர்ந்து பார்த்தார். தோளிலே ஒரு சீலைப்பை. கையில் ஒரு ஃபைல்.

|அதை நான் உனக்கு சொல்லப் போவதில்லை.| மூச்சிரைக்கச் சொன்னார் அவர். கார் கழுவுதல் என்பது இலகுவான வேலையல்ல. தனது வேலைக்கு இடையூறு தருகின்றானே என்பது அவர் கோபம்.

|எல்லா வழங்குனர்களையும்விட உங்களுக்கு மிகவும் குறைவான விலையில் நாம் தருவோம்.|

|கெதியிலை இந்த இடத்தை விட்டுப் போய்விடு. எனக்கும் உனக்கும் சண்டை வரப்போகுது.|

Wednesday 18 April 2018

தூக்கிய திருவடி – சிறுகதை


ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள்.

“காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்”

சில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள் நடக்கின்றன. நம்பர்பிளேற் திருட்டு, காருக்கு கல்லுகளை அடுக்கிவிட்டு நான்கு ரயர்களையும் கழட்டிக் கொண்டு போதல், பெற்றோலை உறுஞ்சி எடுத்தல் போலப் பல வகை.

“பதறாதையப்பா. முதலிலை வேலை செய்யிற இடத்துக்கு இண்டைக்கு வேலைக்கு வரேலாது எண்டு சொல்லும். பிறகு பொலிசுக்கு அடிப்பம்” என்றான் கணவன் குமரேசன்.

பிள்ளைகள் வீட்டில் இடி விழுந்தாலும் எழும்ப மாட்டார்கள்.

Wednesday 11 April 2018

மொழியியல் விருதினைப் பெற்றுக்கொள்கின்றார் ஜெயராமசர்மா


 தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் அதியுயர் விருதான மொழியியல் விருதினை - அவுஸ்திரேலியா மெல்பேர்ணைச் சேர்ந்த மகாதேவாஐயர் ஜெயராமசர்மா அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்.








Tuesday 10 April 2018

' உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' - (வள்ளுவராண்டு 2049) காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - முடிவுகள் :

காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த கவிஞர் 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி அமைகிறது. பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.
இதற்கமைய நடாத்தப்பட்ட ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’. உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் போட்டியாகும்.

தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் - இசை - நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து ‘கணினித் தமிழாக’ புதிய பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்றபடி பாரெங்கும் விரவித் தொடரும் வாழ்வின் அசைவினைப் பதியும் படைப்புகளை ஊக்குவிக்கும் உலகத் தமிழ்ப் படைப்புப் போட்டி.யாகும்.நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழு பரீட்சித்து எட்டப்பட்ட முடிவுகள்.