Saturday 24 March 2018

கடமை கடவுளிடம் சேர்க்கும் - சிசு.நாகேந்திரன்


முற்றும் துறந்த முனிவர் ஒருவர் ஒரு பெரிய விருட்சத்தின் கீழ் ஆழ்ந்த நிட்டையில் இருக்கும்பொழுது அவரது உடம்பில் ஏதோவொரு எச்சம் விழுந்ததை உணர்ந்தார். உடனே அவர் அண்ணாந்து பார்க்கையில் தலைக்குமேலே மரக்கிளையில் ஒரு கொக்கு இருப்பதைக் கண்டு அதை உற்றுப் பார்த்தார். அவரது பார்வையில், பாவம், அந்தக் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது. அவரது தவப்பயன் அத்தனை வலிமை கொண்டது. உடனே போய் ஆற்றிலிறங்கிக் குளித்து உடம்பைச் சுத்தம்செய்துகொண்டார்.  

Sunday 18 March 2018

விதியின் வழியே மதி செல்லும் - சிசு.நாகேந்திரன்


ஒரு மனிதனின் வாழ்க்கையானது அவன் முன்பு செய்துகொண்ட நல்வினை தீவினைகளைப் பொறுத்தே அமையும்.  அவனுடைய பிராரத்துவ வினைகளின் பயனை அடைவதற்கு ஏற்ற விதத்தில்தான் அவனுடைய வாழ்க்கைமுறைகள், வாழ்க்கைவசதிகள், கல்வி, செல்வம், பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சுற்றம் சூழல் முதலிய யாவும் ஏலவே அமைக்கப்பட்டிருக்கும்.  மனிதன் தன் வாழ்க்கையைத் தன்னிஸ்டப்படி நடத்துவதாக எண்ணிக்கொண்டிருக்கிறான். அது அவனுடைய அறியாத்தனமாகும்.  ஏற்கனவே தண்டவாளம் போடப்பட்டுவிட்டது.  ஓடும் ரயில் அத்தண்டவாளத்தில்தான் போகலாம்.  தான் விரும்பியவாறு பாதையை மாற்றிப் போகமுடியாது.  அதேபோலத்தான் மனிதவாழ்க்கையும்.   வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் ஏற்கனவே விதியினால் திட்டமிடப்பட்டு அது நியமித்தபடியே நடந்தேறும். இதற்கு உதாரணமாக ஒரு சிறு கதையை இங்கு பார்ப்போம்.

Monday 12 March 2018

விக்ரர் துறைமுகமும் ’கிரனைட்’ தீவும்


ஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா

விக்ரர் துறைமுகம் (Victor Harbour) தெற்கு அவுஸ்திரேலியாவின் கடல் சார்ந்த ஒரு நகரமாகும். அடிலையிட் நகரத்தில் இருந்து 80 கி.மீ தெற்குப்புறமாக உள்ளது.
 

அங்கே பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அவற்றுள் பிரசித்திபெற்ற ஒன்று ‘கிரனைட் தீவு’ (Granite Island). இது ஒரு ஆளில்லா தீவு. சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இடம். 500 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலத்திற்கு அடியில் உருகிய பாறைகளினால் (Magma) உருவானவை இந்த கிரனைற் பாறைகள். மழை, கடல் அலைகள், காற்று என்பவற்றினால் கரையோரம் அரிக்கப்பட்ட பொழுது இந்தத் தீவு வெளித் தோன்றியது. Ramindjeri இன ஆதிவாசிகள் இங்கே வாழ்ந்தார்கள். அவர்கள் இந்த நிலப்பரப்பிற்கு Nulcoowarra எனப் பெயரிட்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் இடம்பெயர்ந்துவிட்டார்கள்.

Tuesday 6 March 2018

அன்பென்று கொட்டு முரசே! காதலர் தினப் போட்டி


அன்பென்று கொட்டு முரசே!

காதலர் தினப் போட்டி


போட்டியில் எனது நான்கு சிறுகதைகள் உள்ளன. நண்பர்கள், வாசகர்கள் படைப்புகளை வாசித்து - பிரதிலிபியில் படைப்புகளின் கீழே உங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகின்றேன்.. படைப்புகள் வாசகர் பார்வைக்கு ஏப்ரல் 11 வரை இருக்கும். போட்டி முடிவுகள் ஏப்ரல் 13 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

சுட்டிகள் கீழே -

இமைப்பொழுதும் என் நெஞ்சில்

லவ் லெட்டர்

மரத்துடன் மனங்கள்




 

Thursday 1 March 2018

மணவினைகள் யாருடனோ - மாயவனின் விதி வகைகள்


மூன்று முடிச்சு

கமல் + ஸ்ரீதேவி + ரஜனி

அப்போது (1976) நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அண்ணா – கே.கே.எஸ், சுண்ணாகம் தியேட்டர்களுக்குப் போகும்போது அவருடன் சைக்கிளில் தொத்திக் கொண்டு படம் பார்க்கப் போய் விடுவேன். ஆனால் மூன்று முடிச்சு படத்தை அண்ணாவுடன் பஸ்சில் சென்று யாழ்ப்பாணத்தில் பார்த்தேன். தியேட்டரின் பெயரை இப்போது மறந்துவிட்டேன்.

இப்போது நினைவு மீட்டிப் பார்க்கும்போது, இந்தப் படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்குப் பதின்மூன்று வயது என்பதை நம்ப முடியாமல் இருக்கின்றது. வயதுக்கு மீறிய தோரணையில் (18 வயதுப் பெண்ணாக) அவர் அந்தப் படத்தில் நடித்திருப்பார். கமல் ரஜனியுடன் போட்டி போட்டுக் கொண்டு, உண்மையில் சொல்லப் போனால் நடிப்பில் எல்லோரையும் விஞ்சி நிற்பார் ஸ்ரீதேவி.

கே.பாலசந்தர், கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ்.வி கூட்டுச் சேர்ந்தால் சொல்லத் தேவையில்லை. அதேபோல் கமல் ஸ்ரீதேவி ரஜனி. பொதுவாக பாலசந்தர் இரண்டு மூன்று கதைகளை வைத்துக் கொண்டுதான் எல்லாப் படங்களிலும் சிலம்பம் ஆடுவார். அவற்றைத்தான் சுற்றிச் சுழட்டி மாற்றி மாற்றித் தருவார். அதில் அவர் கை தேர்ந்தவர். கதை வசனகர்த்தாவான அனந்து அவரின் வலது கரம்.