Wednesday 22 November 2017

கார் காலம் - நாவல்



அதிகாரம் 16 - களை எடுத்தல்

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கைகளால்தான் பெயின்றை ஸ்பிறே செய்தார்கள். மெதுவாக அந்த இடத்தை ரோபோக்கள் பிடித்துக் கொண்டன. இன்று பிறரைமரில் 6 ரோபோக்களும், ரொப் கோற்றில் 12 ரோக்களும் வந்துவிட்டன. ரோபோக்கள் வந்ததன் பின்னர் ஆட்களுக்கு வேலை இல்லாமல் போயின. வேலையும் சுத்தமாக அழகாக இருந்தது.

2013 ஆம் ஆண்டு தொழிற்சாலை நிர்வாகம், வேலை செய்பவர்களில் 300 பேர் வரை கட்டாய பணி நீக்கம்  செய்ய இருந்தது. கடைநிலை ஊழியர்களில் இருந்து மனேஜர் வரை இதில் உள்ளடங்குவதாக அது இருந்தது.  யார் தலை எப்போது உருளும் என்று எல்லோரும் பயந்தபடி இருந்தார்கள். தினமும் வேலை செய்யுமிடத்தில் இதைப்பற்றிய பேச்சுத்தான் முக்கிய இடம் பிடித்தது. ஸ்மோக்கோ நேரத்திலும் (smoko Time – தேநீர், புகை பிடிக்கும் இடைவேளை) இதைப்பற்றித்தான் கதையாக இருந்தது.

Wednesday 15 November 2017

’அம்பரய’ – நூல் அறிமுகம்


 




போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை

’அம்பரய’ என்றால் என்ன?

நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஒருவேளை சொல் மயக்கம் அல்லது உச்சரிப்பு காரணமாக அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம்.

’இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்திலேயே அதிகமும் எழுதியவர். அம்பரய 1970 களில் இலங்கையில் வெளியிடப்பட்டது. இதைத்தவிர அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை.

அதே போல ஆங்கில வழி மூலம் தமிழிற்குக் கொண்டு வந்தவர் தேவா. தேவா சுவிஸ் நாடைச் சேர்ந்தவர் என்பதைத்தவிர அவர் பற்றிய தகவலும் தெரியவில்லை. இவரது மொழிபெயர்ப்பில் ஏற்கனவே ’சைனா கெய்ரெற்சி’ எழுதிய ‘குழந்தைப் போராளி’ சுயசரிதையை வாசித்திருக்கின்றேன்.

Friday 10 November 2017

கார் காலம் - நாவல்



அதிகாரம் 15 - காசிருந்தால் வாங்கலாம்

2009 ஆம் ஆண்டு இலங்கையில் – முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மிகவும் மனம் உடைந்து போனான் நந்தன். ஒரு வாரமாக அவன் வேலைக்கு வரவில்லை. அதன் பின்னரும் சிலமாதங்கள் அவனால் வேலையில் ஒன்றிக் கவனம் செலுத்த முடியவில்லை. மெல்பேர்ண், சிட்னி, கன்பராவில் நடந்த ஊர்வலங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களில் எல்லாம் அவனும் முன்னர் பங்குபற்றியிருந்தான்.

பாம் விவாகரத்துச் செய்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் வந்த கிறிஸ்மஸ் விடுமுறையில் வியட்நாம் சென்றிருந்த பாம், திரும்பி வரும்போது தன்னில் பாதி வயது கொண்ட அழகிய யுவதி ஒருத்தியை மணம் முடித்துவிட்டு வந்தான்.

வெளிநாட்டு மாப்பிள்ளை. அவளும் ஓமென்று உடன்பட்டுவிட்டாள்.

Tuesday 7 November 2017

மாபெரும் இலக்கியச் சந்திப்பு - கங்காருப் பாய்ச்சல் (26)



இடம் : வேர்மொன்ற் சவுத், மெல்பேர்ண்

காலம் : எங்கள் புத்தகங்கள் வெளிவந்தவுடன்

மங்கல விளக்கேற்றல் : அ, ஆ, இ, திருமதி அ

அமர்வு 1 – வாசிப்பு அனுபவப் பகிர்வு
தலைமை ஆ

பத்திரிகையாளர் ’அ’ எழுதிய ‘மழை’ சிறுகதைத்தொகுப்பை இ புகழ்ந்துரைப்பார். இதன் அணிந்துரையை திரு. ஆ எழுதியுள்ளார்.

திரு ஆ எழுதிய ‘பலாக்கொட்டை’ அறிவியல் கட்டுரைத் தொகுப்பை பத்திரிகையாளர் ‘அ’ முதுகு சொறிவார்.

வைத்தியர் ‘இ’ எழுதிய ‘ஆதாமும் ஏவாளும்’ சிறுகதைத் தொகுப்பை பொறியியலாளர் ‘ஈ’ என்று பல்லிளிப்பார்.

Wednesday 1 November 2017

கார் காலம் - நாவல்


14. அவனேதான் இவனே! இவனேதான் அவனே!!

ஆலின் இப்போது தினமும் மனவள நிலையத்திற்கு சிகிச்சைக்காகப் போய் வருகின்றாள். அதன் பிற்பாடு அவளது நடவடிக்கைகளில் சிறிது மாறுதல்கள் தென்பட்டன. உடல் சோர்வு, பலகீனம், டிப்ரஷன் என்பவற்றிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாள்.

"நான் ஓவர் டைம் செய்து விட்டு, லேட்டாக வீட்டுக்குப் போனால் பாட்னருக்கு கோபம் வருகிறது. என்னையே நெடுகலும் பார்த்துக் கொண்டு இருக்க வேணும் போல கிடக்கு என்கின்றார். இப்படியும் ஆக்கள் இருக்கின்றார்களா?" ஒருநாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென நந்தனிடம் இப்படிக் கேட்டாள் ஆலின்.

"யார் இந்தப் பாட்னர்? உவள் புதுக்கவொரு பாட்னரைப் பிடிச்சிட்டாள் போல" ஆச்சரியப்பட்டான் நந்தன்.