Thursday 20 July 2017

ஆச்சர்யம் தரும் எழுத்தாளர் குரு.அரவிந்தன்



ஞானம் - அட்டைப்பட அதிதி கட்டுரை


குரு.அரவிந்தன் - எமது சமகாலத்து எழுத்தாளர். ஊரில் என் அயல் கிராமமான மாவிட்டபுரம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நான் படித்த யூனியன் கல்லூரியின் அயல் பாடசாலைகளான நடேஸ்வரா, மகாஜனாக் கல்லூரிகளில் கல்வி பயின்றவர். இவரது தந்தையார் குருநாதபிள்ளை நடேஸ்வராக்கல்லூரி கனிஷ்ட பாடசாலை அதிபராகவும், உள்ளுராட்சி மன்ற முதல்வராகவும் கடமையாற்றியவர்.

குரு.அரவிந்தன் இலங்கையில் இருக்கும் காலத்தில் பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் உயர்கல்வி பயின்று, ’மகாராஜா’ நிறுவனத்தில் கணக்காளராகவும் பின் நிதிக்கட்டுப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். 1988 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். தற்போது கனடா / அமெரிக்காவில் கணக்காளராகவும், ரொறன்ரோ கல்விச் சபையில் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.

Friday 14 July 2017

மூப்பும் பிணியும் - கங்காருப் பாய்சல்கள் (23)

தொண்ணூறு வயதையும் தாண்டிய எழுத்தாளர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவருக்கு காது கேட்பது கொஞ்சம் மந்தம். காது கேட்கும் கருவியொன்றை எப்போதும் மாட்டியிருப்பார். ஆனால் கண்பார்வை மிகவும் கூர்மையானவர்.

அடிக்கடி தொலைபேசியில் கதைப்பார். அவருடன் கதைக்கும்போது நாலு வீடுகள் கேட்கக் கத்திக் கதைப்பேன். இடைக்கிடை அவரைப் போய் பார்த்து வருவேன். 30 நிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் இருந்தார்.

காலம் நகர்கின்றது.

Saturday 8 July 2017

விஷப் பரீட்சை - குறும் கதை


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

கஸ்டப்பட்டுக் குடும்பத்தைக் காப்பாற்றும் தந்தை மகனையிட்டுக் கவலை கொண்டார்.

வயது பத்தொன்பது. படிப்பைக் குழப்பிவிட்டான். வேலையும் இல்லை. ஷொப்பிங் சென்ரர்களில் திருடுகின்றான்.

பொலிஸ் வந்து தந்தையை எச்சரிக்கை செய்வார்கள். மகன் தப்பிவிடுவான்.

“மகனே! ஐஞ்சுக்கும் பத்துக்கும் திருடி என்ரை மானத்தை வாங்காதை. திருடுவதென்றால் பெரிசாச் செய். என்னையும் நல்லா வாழ வை. நீ போய் ஜெயிலிற்குள் சிலகாலம் இரு” என்றார் தந்தை.

மகன் ஆடிப் போனான்.




Saturday 1 July 2017

சொல்லிவிடு! - கங்காருப் பாய்ச்சல்கள் (22)


ஒருநாள் மாலா தனது நண்பி சுகந்தியுடன் கலியாணவீடு
ஒன்றில் வெகு சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பதை தூரத்தேயிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் யோகராணி.

கலியாணவீட்டிற்கு வந்திருந்த ஒரு இளம்பெண்ணை, சுகந்திக்கு சுட்டிக்காட்டி மாலா கதைத்துக் கொண்டிருந்தாள்.

கலியாணவீடு முடிந்து வீடு திரும்பும்போது, மாலாவை யோகராணி கார்த் தரிப்பிடத்தில் சந்தித்தாள்.

”அப்பிடியென்ன சுகந்தியோடை பெரிய கெக்கட்டம் போட்டுச் சிரிச்சியள்?” – யோகராணி.