Saturday 24 June 2017

பம்மாத்து உலகம் - குறும் கதை


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்து 30 வருடங்கள் நிறைவு பெறுவதையிட்டு சிங்கப்பூரில் சந்தித்தோம்.

பல்வேறு நாடுகளில் இருந்தும் நண்பர்கள் வந்தார்கள்.

சந்தித்தவுடன், “மச்சான் எப்பிடியடா இருக்கிறாய்?” எனது அவுஸ்திரேலியா நாட்டு நண்பன் கேட்டான்.

வீட்டில் இருந்து கிட்டிய தூரத்தில் அவன் இருக்கின்றான். இங்கு தொலைபேசி இலவசம். இருப்பினும் ஒருபோதும் நாங்கள் பேசவில்லை, சந்திக்கவில்லை.

2200 டொலர்கள் செலவழித்து சிங்கப்பூர் வந்த நான் சொன்னேன்,

“நல்லாக இருக்கின்றேன்.”


Wednesday 14 June 2017

கனவு காணும் உலகம் – சிறுகதை

தர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.

அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது –

மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. வெளியே கடும் குளிர். நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை  எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன? அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட அவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

“ஒருவேளை நான் இருக்கும் பக்கமாகவும் அவள் போகக்கூடும்”

ரக்சி நின்றது.

Wednesday 7 June 2017

சுற்றுலா போய் வருகின்றோம் – சிறுகதை

ரவிராஜ் வீடு ஒன்றை வாங்கினான். மனைவி பவித்திராவிற்கு வீடு நன்றாகப் பிடித்துக் கொண்டது. வீட்டின் உரிமையாளர் வீட்டைச் சுற்றிக் காட்டினார். வீட்டைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார்.

அதன் பின்னர் தனது அயலவர்களைப் பற்றி பெருமையாகச் சொன்னார். வீட்டின் உரிமையாளருக்கு, எதிர்ப்புறமாக இருந்த வீட்டுக்காரர்களில் திருப்தி இருக்கவில்லை. அங்கே ஒரு பெண்ணும் அவளின் இரண்டு மகள்மாரும் குடி இருந்தார்கள். அவர்களைப் பற்றி மேலெழுந்தவாரியாக சில குறைபாடுகளைச் சொன்னார். அந்தப்பெண் விவாகரத்துப் பெற்றவள், குப்பைக்குடும்பம், கூத்துக்குடும்பம். இவை போதாதா அந்தக் குடும்பத்துடன் பழகுவதா இல்லையா என மூடிவு செய்ய? ரவிராஜ் குடும்பத்தினர் அவர்களுடன் பழகுவதில்லை என முடிவு செய்தனர்.

வீட்டிற்குப் போன முதல்நாள் மாலை நேரம் – அந்த வீட்டுப் பெண்பிள்ளைகளில் ஒருத்தி---ஏழோ எட்டோ படிக்கக்கூடும்--- தனது நண்பி ஒருத்தியுடன் வந்து இவர்களின் வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் தன் மார்புடன் இரண்டு பந்துகளை அணைத்திருந்தாள்.

Thursday 1 June 2017

நாய்க்கு சாப்பாடு வேணும் (கங்காருப் பாய்ச்சல்கள் - 21)


சமீப காலங்களாக இங்கே ஒரு கூத்து ஒன்று நடைபெறுவதை அவதானித்து வருகின்றேன்.

‘சந்திரிக்காவுக்குச் சாப்பாடு வேணும்’

ஆறு  மாதங்களுக்கு முன்னர் ஒரு பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒருவர் உணவருந்தி முடிந்ததும்,

“சந்திரிக்காவுக்குச் சாப்பாடு வேணும். பாவம் அவள், நான் வீட்டை போனதும் என்ரை கையைக் கையையே பாப்பாள்” என்று சொல்லியபடி பிளாஸ்ரிக் பெட்டிகளில் சாப்பாட்டை எடுத்துச் சென்றார்.

அவர் தன்னுடைய மனைவியில் இவ்வளவு பாசமா?