Monday 15 May 2017

மனிதாபிமானம் - குறும் கதை


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

ஒரு பெண்ணை ஆண் ஒருவன் கத்தியுடன் துரத்துவதை வைத்தியர்கள் ராமனும் ஜொனதானும் கண்டார்கள்.

“ஜொனதான் நீ பொலிஸைக் கூப்பிடு” அவர்களிடையே பாய்ந்தான் ராமன்.

பொலிஸ் வந்து இருவரையும் கைது செய்தது.

“இப்படியான வேளையில் எங்களுக்கு அறிவியுங்கள். அவர்களுக்குக் கிட்டப் போகாதீர்கள்” பொலிஸ் சொல்ல,

“ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?” என்றான் ராமன்


வைத்தியர்களாகிய நீங்கள் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள், ஒரு உயிரை அல்ல என்றான் பொலிஸ்காரன்.

No comments:

Post a Comment