Wednesday 25 January 2017

நல்ல நேரம்



(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

பெண்விடுதலையும் மாதர்சங்கமும்ராட்டினம் போல சுழலுறாள்தினமும் மருமகள் வெளிக்கிடும்போது மாமியாரின் அர்ச்சனை.

ஒருமுறைதீம் பார்க்கிற்கு சென்றார்கள். குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க மாமியாருக்கு ஆசை வந்தது.

இதுவே நல்லநேரம். மருமகள் சொன்னார்,

மாமி! ராட்டினத்திலை ஏறுங்கோ. சுப்பரா இருக்கும்.”

ராட்டினம் மாமியாரை சுழட்டி ஆட்டியது, உலுப்பியது, தொப்பெனக் கீழே போட்டது. ஐயோ! அலறினார்.

இறங்கியதும் மருமகளை முழுசிப் பார்த்தார். பின்னர் ராட்டினம் என்று மருமகளை என்றுமே சொன்னதில்லை.




Tuesday 17 January 2017

ரகசிய பொலிஸ் 115 – Flashbacks


அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா திஜேட்டர் கட்டப்படவில்லை.

காங்கேசன் துறை வீதியில் இருக்கும் ராஜநாயகியில் தான் அதிகம் படம் பார்ப்போம். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்தான்.

“அண்ணா படிப்பை விட்டு அதிகம் படம் பார்க்கின்றார். தான் கெட்டுப்போவதுமல்லாமல் தம்பியையும் குழப்புகின்றார்” என்பது அக்காவின் குற்றச்சாட்டு. அடிக்கடி அம்மாவிடம் முறையிடுவார். நாங்கள் படம் பார்க்கப் போகும் முயற்சிகளை தன்னால் ஆனமட்டும் குழப்புவார்.

Tuesday 10 January 2017

தோப்பூர் மகாராஜா - சிறுகதை


காரை நிறுத்திவிட்டு, பிரமாண்டமாகத் தெரிந்த அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். வீட்டின் பின்புலத்தில் எங்குமே பச்சைப் பசுஞ்சோலை. ஒரு முதிய கம் மரத்தில் ஒரு சோடிக்கிளிகள். கிங் பறற்---யாழ்ப்பாணத்து பச்சைக்கிளிகள் போல அல்ல--- ஆண் கிளிக்கு சிகப்புத்தலை, பெண்கிளிக்கு பச்சைத் தலை. அதனைப் பார்த்து ரசித்த எனக்கு, அதன் ஓரமாக அமைந்த அழகான அந்த வீட்டைப் பார்க்க ஆத்திரமாக வந்தது.

யாழ்ப்பாணத்தில் தோப்பு என்ற ஊரில், ஒரு ஓலைக்குடிசையில் வாழ்ந்த ராஜசிங்கம் – அவுஸ்திரேலியா வந்து, அடுத்தவரை ஏமாற்றி அடாத்து வேலைகள் செய்து கட்டிய வீடு அது.

Sunday 1 January 2017

கனவு காணும் உலகம் – கட்டுரை



-         பன் நெடுங்காலமாக இலங்கையில் வாழ்ந்து வரும் எமது மக்கள்---மூதாதையர்கள்---ஆவணங்களைக் பாதுகாத்து வைப்பதிலும், பதிவு செய்வதிலும் தவறிவிட்டார்கள். யாழ்.நூலகம்  எரிந்து போனதும், போர் காரணமாக பல ஆவணங்கள் அழிந்து போனமையும் துர்ப்பாக்கியமாகும்.

அவுஸ்திரேலியாக்கண்டம் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு ஆதிவாசிகள் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்த போதிலும், ஓரளவிற்கு அவர்கள் தமது ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில்கூட அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சிலவற்றை அவுஸ்திரேலிய அரசு மேற்கு அவுஸ்திரேலியாவில் மீளக் குடுத்திருக்கின்றது. அவுஸ்திரேலிய முன்னைநாள் பிரதமர் ஹெவின் ரட் 2008 ஆம் ஆண்டு, ஆதிக்குடிகளுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அவர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.