Sunday 11 September 2016

’அக்கினிக்குஞ்சு’ இணையத்தள ஆசிரியர் யாழ்.பாஸ்கரிடம் நான் முன் வைக்கும் சில கேள்விகள்


 









1.   நீங்கள் வெளியிட்ட ‘அக்கினிக்குஞ்சு’ சஞ்சிகை பற்றி – உங்கள் நெஞ்சில் வரும் அந்தக்காலத்து நினைவுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

2.   ’அக்கினிக்குஞ்சு’ சஞ்சிகை நின்று போனதற்கான காரணங்கள் எவை எனச் சொல்வீர்கள்.


3.   ஒரு எழுத்தாளர் சஞ்சிகை நடத்துவதற்கு (இணையம் ஆயினும் சரி) தமது நேரத்தை ஒதுக்குவதனால், அவர் தனது எழுதும் நிலையிலிருந்து விடுபட்டுப் போகின்றார் என்று சொல்வது பற்றி…

4.   ‘அக்கினிக்குஞ்சு’ சஞ்சிகை மொத்தமாக 11 இதழ்களைக் கண்டுள்ளது. இதன் சில பிரதிகளை படிப்பகம் (http://www.padippakam.com/) மற்றும் நூலகம் (http://www.noolaham.org/)  பகுதிகளில் பார்க்கக்கூடியதாக உள்ளது. இதன் முழுப்பிரதிகளையும் pdf கோப்புகளாக உங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்து ஆவணமாக்குவதால் பலரும் பயனடைவர்களே!


5.   ’அக்கினிக்குஞ்சு’ சஞ்சிகை நின்றுபோனதன் பின்னர் இணையத்தளத்தில் தற்போது வருகின்றது. உங்கள் இணையத்தளம் வாசகர் பரப்பில் முதல் பத்து இடங்களிற்குள் இருப்பதாக அறிகின்றேன். உங்கள் இணையத்தளம் மற்றைய இணையத்தளங்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றது?

6.   ஒரு இணையத்தளத்தை நிர்வகிப்பது என்பது இலகுவான வேலை அல்ல. அது பல சவால்களைக் கொண்டது. தினமும் இணையத்தளத்தை புதுப்பித்தும் வருகின்றீர்களே! உங்கள் வேலைப் பணிகளுக்கிடையே எப்படி இது சாத்தியமாகின்றது?


7.   இரண்டொரு தடவை இணையத்தளம் செயலிழந்து போனதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கென்ன காரணம்?

8.   அக்கினிக்குஞ்சு சஞ்சிகை, அக்கினிக்குஞ்சு இணையத்தளம் ஒப்பிடுங்கள்.


9.   சஞ்சிகையை நடத்தியதில் / இணையத்தளத்தை நடத்துவதில் ஏற்படும் சுவாரஸ்யமான அனுபவங்கள், இடர்ப்பாடுகள் பற்றிச் சொல்வீர்களா?

10. தென்னிந்திய திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களின் நிகழ்ச்சிகளுக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு போகின்றவர்கள், தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தங்களின் இணையத்தளத்திற்கு ஆதரவு தருகின்றார்களா?


11. இணையத்தளத்தை நடத்துவதற்கு ஏற்படும் பெரும் செலவை எப்படி ஈடு செய்கின்றீர்கள்?

12. அக்கினிக்குஞ்சு 24 hours Radio என்னவாயிற்று?


13. அக்கினிக்குஞ்சு இணையத்தளம் வேறு என்ன முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கின்றது?

14. நீங்கள் பல நாடகங்களில் நடித்திருக்கின்றீர்கள். உங்கள் நாடக அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள். ’வலை’ என்ற நாடகத்தில் நீங்கள் ‘சாணக்கியன்’ என்ற பாத்திரத்தில் திறப்பட நடித்திருப்பதாகச் சொல்கின்றார்கள். அந்த அனுபவம் பற்றி?


15. நீங்கள் அங்கம் வகித்த, மெல்பேர்ணில் இயங்கிய ‘இளம்தென்றல் கலைமன்றம்’ பற்றிச் சொல்லுங்கள்.

16. அமரர் எஸ்.பொ தொகுத்த ’பனியும் பனையும்’ தொகுதியில் தங்களின் ‘ஓய்வு நாள்’ என்ற சிறுகதையொன்று இருக்கின்றது. அது பின்னர் ஞானம் சஞ்சிகையினர் தொகுத்த ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ சிறப்பிதழிலும் வந்தது. தங்களின் சிறுகதை அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்.


17. ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் பற்றி உங்களின் கணிப்பு எப்படி இருக்கின்றது?


18. அக்கினிக்குஞ்சு சஞ்சிகை, பின்னர் இணையத்தளம் இரண்டிலும் எஸ்.பொ பிரதம ஆசிரியராக இருந்துள்ளார். எஸ்.பொ உடனான தொடர்புகள் பற்றிச் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment