Saturday 7 May 2016

நிதி சேகரிப்பு


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

பாடசாலை சறிற்றிக்காக சொக்கிளேற் விற்க வேண்டும்.

பிரணவன் அயல் வீடுகளுக்குச் சென்றான். இரண்டு டொலர்களுடன் கவலையாக வந்தான். ஒருவரும் வாங்கவில்லை.

நாளை அடுத்த வீதிக்குச் செல்வோம் என்றார் அம்மா.

மறுநாள் பிரணவன் பாடசாலை சென்றதும், தாயார் அடுத்த வீதிக்குச் சென்றார். மகனிடம் சொக்கிளேற் வாங்கும்படி அவர்களிடம் நாணயக்குற்றிகளைக் கொடுத்தார். பலர் காசை வாங்க மறுத்து, தாங்கள் மகனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள்.

மாலையில் எல்லாவற்றையும் விற்று மகிழ்ச்சியில் வந்தான் மகன்.



No comments:

Post a Comment