Saturday 24 December 2016

அப்பாக்கள் இருவர் – சிறுகதை

வவனியாவிற்கு இங்காலை புகையிரதத் தண்டவாளங்களை இயக்கங்கள் எல்லாம் புரட்டிப் போட்டிருந்த காலம். வடபகுதிப் பிரயாணிகள் தலைநகர் கொழும்பிற்குப் போவதென்றால், முதலில் வவனியா சென்று அங்கிருந்து புகையிரதம் மூலமாகவோ அல்லது பஸ் மூலமாகவோ போக வேண்டும். பஸ் பிரயாணம் ஆபத்தானது. சிங்களக் காடையர்கள் பஸ்சை இடையிலை மறிச்சு தமிழ் மக்களைத் தொந்தரவு செய்வார்கள். இளைஞர்களைக் கதறக் கதற இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.

நாங்கள் வவனியா புகையிரத நிலையத்திற்கு ஒரு மணியளவில் போய் விட்டோம். ஒரே சனக்கூட்டம். ஒன்றரை மணிக்குத்தான் கொழும்புக்குப் போகும் புகையிரதம் வரும்..

“நான் ‘பாக்’ ஒண்டை கோணர்சீற்றுக்கு எறியிறன். நீ அப்பாவைக் கூட்டிக்கொண்டு கெதியிலை ஏறு. என்னைப் பாக்க வேண்டாம். நான் எப்பிடியோ ஏறிவிடுவன்” தம்பியைப் பார்த்துச் சொன்னேன்.

Thursday 22 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்


யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

19.   மாலையில்கண்விழிக்கும் மைதானம் 

     விளையாட்டுத் துறைக்குத் திரு.வி.பாலசிங்கம் அவர்கள் பொறுப்பாக இருந்தார். பழைய மாணவராகிய, வீமன்காமத்தைச் சேர்ந்த அவர், கல்லூரிப் பற்றோடு காலநேரம் பாராமல் உழைத்தவர். பயிற்றப்பட்ட உடற் கல்வி ஆசிரியர். கடுமையான உழைப்பாளி. தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த அவர் எடுத்த முயற்சியைக் கச்சிதமாக முடிப்பதில் வல்லவர். நன்றி மறவாத நேர்மையாளர். எனது நலன்களில் மிகவும் கரிசனை காட்டிய பல உயரிய மாண்புகள் நிறைவுறப் பெற்றவர். மாணவர்கள் மிக்க மரியாதை கொடுத்த ஆசிரியர். பாடசாலை ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு மிக்க உதவியாக இருந்தவர். அவரின் தலை தெரிந்தாலே மாணவர்கள் அமைதி ஆகிவிடுவார்கள். தலையைக் குனிந்து கொண்டு நழுவுவார்கள்.

Tuesday 20 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
18. தோள்கொடுத்த தோழர்கள்
        
    முதல் நாளே திணறினார்.

     அதிபராகி நான்கு வருடங்கள் கழித்து ஒரு வெள்ளி இரவு எனக்கு ‘ஹாட் அற்றாக்’ வந்தது. அப்பொழுதுதான் முதன் முதலாக, அடுத்து வந்த திங்கட்கிழமை விடுதலை எடுத்தேன். அதிபராகிய பின்னர் எடுத்த ‘லீவின்’ முதல் நாள். பிரதி அதிபர் பொறுப்பாக இருந்தார். அவருக்கு அது முதல் நாள். ஒரு தினம்கூட முகாமைத்துவ சுமையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினார். கல்லூரிச் செயற்திட்டத்தில்  ஒழுக்காற்றுக் குழு ஒன்று நிரந்தரமாக இருந்தது. அதில் அதிபர், பிரதி அதிபர், பகுதிப் பொறுப்பாளர்கள், மாணவிகள் ஒழுக்கப் பொறுப்பாளர்கள் அங்கத்தவராக இருந்தனர். அவர்களில் மூவர் இப்பொழுது கனடாவில் வாழ்கிறார்கள். எனது பதவிக் காலத்தில் நான் ஒரு தடவைகூட அதனைக் கூட்டியது கிடையாது. ஓர் அற்ப விடயத்தைக் கையாளத் தெரியாமல், முதல் நாள் திங்கட்கிழமை ஒரு தவறு விட்டார். இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமை ஒழுக்காற்றுக் குழுவைக் கூட்டி அந்தத் தவறைப் பூதாகாரமாக்கினார். மூன்றாம் நாள் புதன்கிழமை யாழ்-காங்கேசன்துறை வீதியில் ஊர்வலம் வைத்து மாதவறு செய்தார். அது இன்னொரு தவறுக்கு வழிசெய்தது. அந்தத் தவறுகள் என்னைப் பாதிக்காமல் விடவில்லை.

Sunday 11 December 2016

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை

ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா மகேஸ்வரி கடிதம் எழுதிக் கொண்டதன்படி, நடராஜா மாமா வீட்டிற்கு ஒரு தடவை போய்ப் பார்த்தால் என்ன என்று ரமணனுக்கு தோன்றியது.

நடராஜா மாமாவின் மகன் ரகுவின் திருமணத்தின் போது மாப்பிள்ளைத் தோழனாக தான் நின்றதை ரமணன் நினைத்துப் பார்த்தான். பதினைந்து பதினாறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தடல்புடலான கலியாணம் அது. மாப்பிள்ளை, மாப்பிள்ளைத் தோழனுக்கு வேலை எடுத்துக் தராமல் வேறு யாருக்கு வேலை எடுத்துக் கொடுப்பார்?

ரகுவிற்கு திருமணம் நடந்தபோது ரமணன் பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்தான். தினமும் ரகு வேலைக்குப் போகும்போது ரமணனும் அவரது சைக்கிளில் ஏறிக் கொள்வான். அது ஒரு காலம்.

Saturday 10 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
17.   “வரச்சொல்லுங்கள்! விசாரியுங்கள்!”

     கல்விசார் ஆளணியினர் சரிவரக் கடமை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதிபருக்கு, அவர்கள் சார்ந்த பொறுப்பும் கடமையும் உண்டு. பாடசாலை நேரத்தில் அவர்களுக்கு வரும் இடைஞ்சல் சமயங்களில், அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு உதவியளிக்கவும் பின்நிற்கக் கூடாது. பொதுவாகப் பெற்றார்கள் சிலர் மிக்க உணர்ச்சியுடன் வருவார்கள். குறிப்பாக மாணவர்களை அரவணைத்துச் செல்ல முடியாத ஆசிரியர்கள் பற்றியதாகவேயிருக்கும். அவ்வேளைகளில் ஆசிரியரைப் பாதுகாக்க வேண்டியது அதிபரது கடமை. நடுநிலையென்று ஏனோதானே என்று விடயத்தைக் கையாள்வது விபரீதமாக முடியவும் வாய்ப்பாகிவிடும். ஒரு பதம்.

Friday 9 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன்கல்லூரி பதிவுகள் நினைவுகள்

16.   பிரதமர் கொண்டுவந்த அரங்கம்


பனையடைப்பில் திறந்தவெளியரங்கு அமைந்தமைக்குச் சுவாரஸ்யமான  ஒரு கதையுண்டு. பிரதமர் கௌரவ ஆர்.பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகைதர விருந்தார். அச்சமயம் அவர் தெல்லிப்பழையிலும் சொற்பொழிவாற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டன. அது யூ.என்.பி. அரசியல் பிரசாரச் சுற்று வருகையாகவே இருந்தது. தெல்லிப்பழையில் யூனியன் கல்லூரி தெரிவு செய்யப்பட்டது. சுதந்திரப் போராளிகளின் ஆரம்ப கட்டம். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுக் காங்கேசன்துறைக் காவல்நிலைய அத்தியட்சகர் எனது அலுவலகத்துக்கு வருகை தந்தார்.

Monday 5 December 2016

முதலும் வட்டியும்

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

இராயப்பு நகை அடைவு பிடிப்பவர், வட்டிக்கு காசு கொடுப்பவர்.

எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு திடீரென மாயமானார்.

திரும்பி வந்தவர் எல்லோருக்கும் கையை விரித்தார்.

பதம் பார்க்க பலரும் காத்திருந்தனர். ஒருநாள் பொலிஸ் ஸ்ரேசனுக்கு அருகில், சாக்கு மூட்டையைக் கவிழ்த்து மொத்தினார்கள்.

மயங்கிய நிலையில் கண்ட பொலிசார்,
“சத்தம் போட்டிருந்தா கலைச்சிருப்போமல்லே” என்றதற்கு இராயப்பு வாயைத் திறந்து பே பே என உழறினார்.


வங்காளவிரிகுடாவிற்குள் ஆறு தங்கப்பற்கள் ஜொலித்தன.

Sunday 4 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
15. சேவகனும் நானே. எஜமானும் நானே.
  
     யூனியன் கல்லூரியது எழுச்சியின் சூத்திரம் - வருடாவருடம் தயாரித்து நடைமுறைப் படுத்திய வருட முகாமைத்துவ-நிருவாகச் செயற்திட்டத்திலேயே (யுnரெயட ஆயயெபநஅநவெ Pசழதநஉவ) –தங்கியிருந்தது. அதனை ஒரு முறை வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் திரு.சிவநாதன் அவர்கள் எனது கதிரையில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். அவர் திடீரென,

     “என்ன தலையலங்காரம் பற்றிக்கூட (ர்யசைனழ)  எழுதியிருக்கிறது?” என்றார்.

          பின்னர் இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி புவனேஸ்வரி சச்சிதானந்தன் அவர்கள் அந்த செயற்திட்டத்தைப் பார்க்க வந்திருந்தார். திரு.சிவநாதன் அவர்கள் அது பற்றி வியந்து கூறிப் பார்வையிடச் சொன்னதாகத் தெரிவித்தார்.

Friday 2 December 2016

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' சிறுகதை விமர்சனத்தை முன் வைத்து

முனைவர் துரை. மணிகண்டன் & முனைவர் கணபதிராமன்
விமர்சனம் என்பது இப்பொழுது குறைந்துவிட்டது. ஒருகாலத்தில் விமர்சனம் செய்யப்படாத நூல்கள் தகுதியில்லாத நூல்களாக ஆய்வாளர்களால் கருதப்பட்டது. இன்று அது தலைகீழாக மாறிவிட்டது. காரணம் இன்று யாரும் விமர்சனத்தை விரும்புவது இல்லை. அப்படியே விமர்சனம் செய்யப்பட்டாலும் புகழ்ந்து கூறினால் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால், அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் இருக்கின்றனர்.

Thursday 1 December 2016

வானமுதம் தமிழ் வானொலி உலகளாவியரீதியில் நடாத்திய சிறுகதை, கவிதைப் போட்டி முடிவுகள் - 2016


அவுஸ்திரேலியா மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி உலகளாவியரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2016

Monday 28 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன்கல்லூரி நினைவுகள் பதிவுகள்

14.   “கோவில் கட்ட முன்னர் ஏன் தெரிவிக்கவில்லை?”


        கல்லூரி வளாகத்துள் அம்பாள் கோவில் கட்டியபொழுது பழைய மாணவர் சங்கத்தில் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதனைப் பற்றிய கேள்வி எழவும் இல்லை. ஆனால் கோவில் கட்டி முடிந்த பின்னர் நடந்த பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் திரு. எஸ்.ஆர்.ஜேசுபாலன் அவர்கள் எழுந்து ஒரு கேள்வி எழுப்பினார்.  -1986-

“கோவில் கட்டுவதைப் பற்றி நீங்கள் ஏன் பழைய மாணவர் சங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை?” 

Wednesday 23 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
 13.   அம்பாள் ஆலயத்தின் வருகை-1986

அம்பாள் ஆலயத் திருப்பணி, யூனியன் கல்லூரி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். யூனியன் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் 95 சதவீதம் சைவசமய மாணவர்களாகும். இருந்தும் அவர்களது தேவைகள் அபிலாசைகள் கவனிக்கப்படாமல் இருந்தன. 1962இல் அரசு கல்லூரியைப் பொறுப்பேற்றதும் நவராத்திரி விழா ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஒரு பத்தியில் சுவாமி படத்தை வைத்து காலையில் வணங்கினர். மாணவர்களது சைவசமயம் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் இரண்டு வகையாக இருந்தன. ஒன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் திருவிழாச் செய்வது. அடுத்தது வசதியான ஆகம விதிப்படியான கோவில் அமைப்பது.

Tuesday 15 November 2016

மரத்துடன் மனங்கள் - சிறுகதை

இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.

”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”

“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”

இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.

“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும் எங்களோடை வாருங்கள்” சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்த பூதங்களில் நான்கு போயின.

கருணா மாத்திரம் பல்லவியுடன் நின்றான். சந்தித்த முதல்நாளே கருணாவின் கண் அவள்மீது பட்டுவிட்டது.

Saturday 12 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
                   


12.   சீருடையில் புதிய பொலிவு                  

யூனியன் கல்லூரியின் செழுமைக்கும் முழுமைக்கும் பூரண சீருடை தேவைப்பட்டது. பெண்பிள்ளைகள் முன்னரே வெள்ளைச் சீருடை அணிந்து ரை கட்டி வந்தார்கள். ஆனால் கால்களில் பாட்டா செருப்புக்கள். தோல் செருப்புக்கள். செருப்பில்லாதவர்கள். ஆண்கள் விரும்பிய வண்ண உடைகள் அணிந்திருந்தார்கள். ஒரு குருவிகூடக் கால்மேஸ் சப்பாத்து அணியவில்லை. விரும்பிய தலையலங்காரம். பறக்கலாம். சுருட்டிவிடலாம். ஆணும் பெண்ணுந்தான். திருவிழாக் காலக் கோலத்தில் வந்து போனார்கள்.

Friday 11 November 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (-18)

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்

(ஜூன் 2012 வல்லினம் சஞ்சிகையில் வந்தது. பொருத்தப்பாடு கருதி மீண்டும்)

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்முறை தனது 12வது எழுத்தாளர்விழாவை, மே மாதம் மெல்பேர்ணில் கொண்டாடியுள்ளது. இயந்திரமயமான வாழ்விலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இவ்விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மெல்பேணில் தமிழுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்கள் என்றவுடன் இருவரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஒருவர் லெ.முருகபூபதி, இலங்கையில் சர்வதேச எழுத்தாளர்விழாவை முன்னின்று நடத்தியவர். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்விழாவின் மூலகர்த்தா. மற்றவர் இப்பொழுது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராக இருக்கும் சு.ஸ்ரீகந்தராசா. இவரும் ஈழம் தமிழ்ச்சங்கம், அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம் போன்றவற்றில் தலைவராக இருந்தவர். ஆரம்பகாலம் முதல் தமிழ் எழுத்தாளர்விழாவுடன் தொடர்புடையவர். இவர்களுடன் கலைவளன் சிசு.நாகேந்திரன், மாத்தளை சோமு, கவிஞர் இளமுருகனார் பாரதி, ஓவியர் ஞானம், திருநந்தகுமார், திருமதி கனகமணி அம்பலவாணர், மதுபாஷினி (ஆழியாள்), அருண் விஜயராணி, சண்முகம் சபேசன், செந்தூரன், மு.நந்தகுமார், செல்வபாண்டியன், சட்டத்தரணி செ.ரவீந்திரன், எஸ்.கொர்னேலியஸ், என்.எஸ்.நடேசன், விமல் அரவிந்தன், 'வானொலி மாமா' நா.மகேசன், க.சிவசம்பு, மாலதி, கெளசல்யா, கிருஸ்ணமூர்த்தி எனப் பலர் இம்முறை கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Monday 7 November 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (19)

மெளனம் கலைகிறது (4)


நித்தியகீர்த்தியின் வாக்குமூலமும் ’அந்த’ நபரும்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்றது. அப்பொழுது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இருக்கவில்லை.

சங்கம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சங்கத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் பெரும்பாலும் நல்லைக்குமரன் குமாரசாமி அவர்களின் வீட்டில் நடந்தன. இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டபோது அங்கு முருகபூபதி, கே.எஸ்.சுதாகர், அருண் விஜயராணி, சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அல்லமதேவன், மாலதி, கனகமணி, சிசு நாகேந்திரன் என்பவர்கள் அங்கு இருந்ததாக ஞாபகம்.

சங்கத்தை ஆரம்பிக்கும் பொழுது, அதன் யாப்பு விதிகளை அமைத்தவர் கூட்டத்தில் பின்வருமாறு சொன்னார்.

“ஒரு குறிப்பிட்ட நபரை, சங்கத்திற்குள் எக்காலத்திலும் நாம் அனுமதிக்க முடியாது. மீறி வந்தால் நான் போய் விடுவேன்.”

Sunday 6 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
 11.   மர்மத்தில் ஆரம்பித்த கதை
                                   
யூனியன் கல்லூரியின் 163 வருட அடிப்படைக் கட்டுமானத்தினைப் புதுக்கி அமைத்த முதற் கட்டம் 1979 ஜனவரி முதலாந் திகதி நிகழ்ந்தது. யூனியனிலிருந்து ஆரம்ப பிரிவைப் பிரித்தெடுத்து, தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியைத் தனித்தியங்க வைத்த கதை மர்மத்தில் ஆரம்பித்தது. அதனை அடுத்து ஆரம்ப பிரிவைத் தனித்துவமாக இயங்க வைக்க எடுத்த முயற்சிகள் துரிதமாகப் பலனளித்தன. இனிய தேநீர் விருந்துடனும், மலர்ந்த முகங்களுடனும் அது ஓஹோ என்று நிறைவேறியது. அதன் விளைவாகப் புதுப் பிரச்சினைகள் வரும் என்று எவரும் ஆருடம் கூறவில்லை. 

Wednesday 2 November 2016

சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும் (2) - கட்டுரை

பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் - கட்டுரை



எங்கெங்கு சீனர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு அருகாமையில் ‘ஜொஸ் இல்லம்’ (JOSS HOUSE) இருந்தது. ‘JOSS HOUSE’---சீனர்களின் வழிபாட்டுத்தலம்---‘joss’ என்பது கடவுளைக் குறிக்கும் போத்துக்கல் சொல்லான ‘dios’ மற்றும் லற்றின் சொல்லான ‘deus’ இலிருந்து வழிவந்ததாகும்.

அந்தக்காலத்தில் பென்டிக்கோவில் இருக்கும் Emu point எனப்படும் பிரதேசத்தில் நான்கு ஜொஸ் இல்லங்கள் இருந்தன. தற்போது ஒரு ‘ஜொஸ் இல்லம்’ மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. இது உள்ளூரில் செய்யப்பட்ட செங்கற்களினாலும் மரத்தினாலும் ஆனது. வீரத்தின் அடையாளத்தைக் குறிக்கும் சீனர்களின் பாரம்பரிய நிறமான சிகப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த ஆலயம் - மத்தியில் பிரதான மண்டபம், வலதுபுறம் மூதாதையர்களின் ஆலயம் (Ancestral Temple), மற்றும் பாதுகாப்பவரின் இல்லம் (Caretaker’s Residence) என மூன்று பகுதிகளைக் கொண்டது. இங்கு (ALTAR) பலிபீடம் இருக்கின்றது. கோவிலின் பிரதான தெய்வம் KWAN GUNG.

Tuesday 1 November 2016

சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும் (1) - கட்டுரை

பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் - கட்டுரை


சமீப காலங்களாக எனது சீனநண்பர் ஒருவரை சிலர் ‘பென்டிக்கொ பென்டிக்கோ’ என்று பரிகாசம் செய்வதைக் கண்டிருக்கின்றேன். அவரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்தேன்.

“எனது மகள் primary school இல் இருந்து secondary school இற்கு படிக்கப் போக இருக்கின்றார். மெல்பேர்ண் நகரத்தில் உள்ள பிரபலமான பெண்கள் கல்லூரியான Mac.Robertson Girls' High School இற்குப் போவதற்காக அவர் முயற்சி எடுத்து வருகின்றார். BENDIGO இல் ‘JOSS HOUSE’ என்ற எங்கள் கோவில் உள்ளது. அங்கே போய் வந்தால் நினைத்த காரியம் பலிக்கும் என்பார்கள். மகளின் பரீட்சைக்கு முன்பதாக நாங்கள் அங்கே போய் வந்தோம்” அவர் சொன்னார்.

அதற்கடுத்த வார இறுதி நாட்களில் நான் பென்டிக்கோ சென்றிருந்தேன். வெள்ளை இனத்து தன்னார்வத் தொண்டர் ஒருவர் அங்கே வேலை செய்கின்றார். அவர் ‘ஜொஸ் இல்லம்’ பற்றித் தரும் விளக்கம் அற்புதமானது. அவர் தனக்குத் தெரிந்த விபரங்களை மிகவும் ஆர்வத்துடன் தெரியப்படுத்தினார்.

Monday 31 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

10.   புகையிரதத்தில் பறிபோன
      மகாதேவன்.


புதிதாகக் கல்லூரிக்குக் கொண்டு வந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் திருப்தியாகவே கடமை புரிந்தனர். எனினும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் இருக்கவே செய்தது. இது பெரிதும் க.பொ.த. உயர்தர வகுப்பு ஆசிரியர்களுக்கே பொருந்தும்.

உயர்தர வகுப்புப் பாடத்துக்கு ஓர் ஆசிரியரை நண்பர் ஒருவர் சிபாரிசு செய்தார். அவர் நகரப் பாடசாலையிலிருந்து எமது கல்லூரிக்கு மாற்றுவிக்கப்பட்டார். அந்த ஆசிரியருக்கு அந்தப் பாடத்தில் தேவையான ஞானம் இல்லை. பாட ஆயத்தம் செய்தும் அவரால் தேவையான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கரும்பலகையில் எழுதுவதில் அடிக்கடி தவறுகள் தலைகாட்டின. மாணவர்களுக்கும் ஆசிரியருக்கு மிடையில் தர்க்கம். நாட்கள் நகர நகர வகுப்பறையில் ஒரே கூச்சல். மாணவர்கள் வினாக்கள் எழுப்பும் பொழுது, ஆசிரியர் நிதானத்தை இழந்து நின்றார். பக்கத்து வகுப்புக்களில் கற்பித்த ஆசிரியர்கள் முறைப்பாடுகள் செய்தனர். அந்தப் பிரச்சினையை எப்படிச் சுமுகமாகத் தீர்ப்பது?

Saturday 29 October 2016

அப்பா! நீங்கள் சொல்வது சரிதான்.

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

கனகரத்தினம் குடிச்சுப் போட்டு தெருவுக்கு தெரு விழுந்து கிடப்பார்.

பிள்ளைகள் அவரின் போதை தெளிவித்து உணவு குடுத்து,
“அப்பா இனிமேல் எங்கட மானத்தை வாங்காதையுங்கோ” என்பார்கள்.

“என்ரை நாலு பிள்ளையளையும் படிப்பிச்சு நல்ல பண்புகளோடு வளர்த்து விட்டிருக்கிறன். எனக்கு நீங்கள் அறிவுரை சொல்ல வேண்டாம்” தந்தையார் சொல்ல,


”அதாலைதான் நீங்கள் என்ன கூத்தாடினாலும் நாங்கள் உங்களை வடிவாகப் பாக்கிறம்” என்றார்கள் பிள்ளைகள்.

Saturday 22 October 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION

 
by

Kathir Bala Sundaram

Chapter 16
Bona Fide Tigers

February 9th, 2006 arrived without fanfare, without celebration. Yet for a few people, the date for paying Vasantha Valautham’s fine became significant in ways they never dreamed possible.
Haran Kandiah sat on the narrow bench that lay within the shadow of an ironwood tree, the Ministry of Political Affairs before him. He wanted to see his sister again.    
He coughed once and then craned his neck to look down the road, hoping to see his niece’s rented car approaching from Colombo, the capital of Sri Lanka. Dr. Maithily Rooban had arrived in Sri Lanka from Australia the previous day, so Haran expected her along soon.

Thursday 20 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

9. குட்டிப் புத்தகம் போதுமா?
                    
           
         தாம் பல்கலைக்கழகப் பட்டத் தேர்வுக்கு எடுத்த பாடங்களையே, உயர்தர வகுப்புகளில் அற்பளவு திருப்தியாகக்கூடக் கற்பிக்க முடியாத ஆசிரியர்களும் கடமை புரிந்தார்கள். அவ்வாறானவர்கள் தமது இயலாமையை ஏற்றுக்கொண்டு வேறு கீழ் வகுப்புகளில் பாடங்கள் எடுத்திருக்கலாம். சிலர் அப்படிச் செய்யாது, வகுப்புக்களுள் புகுந்து, கடமை புரிவதாக நடித்துக் கொண்டிருந்தார்கள். எத்தொழில் புரிபவருக்கும் மனச்சாட்சி இருக்க வேண்டும். இளைய சமுதாயத்துக்குப் பாம்பாட்டி வித்தை காட்டக்கூடாது. ஒரு பதம்:

Wednesday 19 October 2016

மெளனம் கலைகிறது (3)


 

தொகுப்புகளின் கதை

அவுஸ்திரேலியாவில் பலர் சேர்ந்து எழுதிய கதைகள், கவிதைகள் அடங்கிய தொகுப்புகள் வந்திருக்கின்றன. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அத்தகைய தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. ‘உயிர்ப்பு’ சிறுகதைத்தொகுதி, ‘வானவில்’ கவிதைத்தொகுதி போன்றவை அப்படி வெளிவந்தவை.

சில வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இத்தகைய தொகுதிகளை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கான அறிவித்தலை பத்திரிகை, வானொலிகள் மூலம் விடுத்திருந்தார். அதனடிப்படையில் நானும் எனது ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தேன். சிறுகதைகள் தெரிவு செய்யபட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு புத்தகமும் வரவிருப்பதாகச் சொல்லியிருந்தார்.

Friday 14 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்


யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

8. பொருத்தம் பார்த்தே அனுப்பினோம்

           
     ஆசிரியருக்கும், அவர் கற்பிக்கின்ற பாடத்துக்கும் பொருத்தம் பார்த்தே வகுப்பிற்கு அனுப்பவேண்டும். மனப் பொருத்தம் இல்லாத குடும்பத்தில் சச்சரவு வருவது போலவே, பாடப் பொருத்தம் இல்லாத ஆசிரியருக்கும் மாணவருக்கு மிடையில் வகுப்பில் சச்சரவு ஏற்பட்டதை அவதானித்திருக்கிறேன்.

ஆசிரியரின் மேன்மையான ஊழியத்தை மேலுயர்த்த உள்ள ஓரே வழி, அவருக்குப் பொருத்தமான பாடத்தை, பொருத்தமான வகுப்பிற்கு வழங்குவதாகும். எமது வெற்றியின் மந்திரத்தில் அதுவும் ஒன்று. விசேட பயிற்சி பெற்றவர்கள், பட்டதாரிகளைப் பொறுத்தவரை - அவர்கள் குறித்த பாடங்களை எடுக்கவேண்டும் என்பதே ஒழுங்கு. இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி, ஒழுங்கு முறைக்கு இயைபு இல்லாத வகையில், செயலாற்ற வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன.

Monday 10 October 2016

கனவு மெய்ப்பட வேண்டும் - சிறுகதை


சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும் ஆறு மாதங்களும் உருண்டோடிவிட்டன. ஆனாலும் சற்குனம் கொழும்பைவிட பிற இடங்களில் இருந்த காலம்தான் அதிகம். பாகிஸ்தான் சிறைச்சாலையில் ஆறுமாதங்களும், ஜப்பான் ஹோட்டல்களில் மூன்றுமாதங்களுமாக காலத்தைக் கழித்துவிட்டு ‘பூமராங்’ போல புறப்பட்ட இடத்திற்கு வந்துவிட்டார்.

Friday 7 October 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

7. சமூகப் பணி
  
ஒரு கல்லூரியின் எழுச்சி மேன்மை முதன்மை என்பன முதற்கண் அதன் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. அதிபரின் முகாமைத்துவ-நிருவாகத் திறமை இரண்டாம் பட்சந்தான். அதிபர்தான் உதவியாசிரியர்களை முதலாம் பட்சமாகச் சிருஷ்டிக்க வேண்டியவர். சிருஷ்டிகர்த்தா பொய்த்தால், உதவி ஆசிரியர்கள் கல்லூரியை இரண்டாம் பட்சமாக்கிவிடுவர். அதன் மேலும் அவர்கள் கொண்டு செல்லத் தயங்கமாட்டார்கள். உழுகிற மாடானாலும், மௌனமாக ஏரைப் பிடித்துக் கொண்டிருந்தால், காலகதியில் படுக்கவும் தொடங்கிவிடும். அதிபர் மட்டும் ஒரு கல்லூரியை ஓஹோ என்ற நிலைக்கு அழைத்துச் செல்ல முடியாது.

Sunday 2 October 2016

கடைசி ஓட்டம் – சிறுகதை





தர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.

அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது – மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை  எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன? அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட தர்முவிற்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

Saturday 1 October 2016

பொய் அன்பு போகும்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

தயாளினியும் பத்மாவும் பூங்காவில் பிள்ளைகள் விளையாடுவதை இரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பிள்ளை… பிரணவன் உச்சிக்குப் போகாதை. கவனம்” பத்மா சொல்வதற்குள் தீபன் அவனைத் தள்ளி விட்டான்.

தீபனின் தாயார் தயாளினியும் அதைப் பார்த்திருந்தார்.

பிரணவன் மறுபுறமுள்ள பற்றைக்குள் விழுந்தான். கால் முறிந்து வைத்தியசாலையில் படுத்திருந்தான்.

தள்ளியதைப் பிள்ளையும், பார்த்ததைத் தாயாரும் ஒருவருக்கும் சொல்லவில்லை.


“முற்பிறப்பிலை செய்த பாவத்திற்கு தண்டனை” வைத்தியசாலைக்கு வெளியே நின்ற தயாளினி யாருக்கோ சொல்வது பத்மாவிற்குக் கேட்டது.

Sunday 25 September 2016

ஆபத்து


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

வகுப்பறைக்குள் நுழைந்ததும் பெரும் ஆச்சரியம். 

பார்ப்பதற்கு பெரும்பாலான மாணவர்கள் ஒரே மாதிரியாகவே இருந்தார்கள். பல்லினக் கலாசார நாடுகளில், வருங்காலங்களில் இது பெரும் சவாலாகப் போகிறது.

அருகே இருக்கும் சீனப்பெண், ஒரு முறை விரிவுரையைக் கேட்டாலோ, புத்தகத்தைப் படித்தாலோ இலகுவாகக் கிரகித்துக் கொள்கின்றாள். அவள்தான் வகுப்பில் முதன்மையானவள்.

இது எப்படி? அவள் சொல்கின்றாள்:


என்னுடைய பரம்பரையில் அறிவாளிகளே கிடையாது. நான் ரெஸ்ற் ரியூப் பெண்.

Tuesday 20 September 2016

His Royal Highness, The Tamil Tiger

by

Kathir Bala Sundaram

Chapter 15
Black Luck

Haran Kandiah felt worse than normal as he coughed violently on the morning of February 6. His eyes were bloodshot, and his cheeks looked sunken from lack of nourishment. He couldn’t even bring himself to drink the coffee his lovely wife set in front of him.
The deadline to deliver the money to save his sister was just a couple days away. As of yet, the maximum offer for the house and shop was just shy of three million rupees. It was nowhere near enough.
Standing shakily to his feet, he began the walk to his sister’s house in another effort to find a buyer willing to pay more. He passed a temple where he paused to pray, pressing his palms together in front of his chest. He prayed despite the fact that he had given up hope. His failure haunted him and he couldn’t shake the image of his accusing sister looking at him with sad eyes.

Tuesday 13 September 2016

பொற்காலம் - கதிர் பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

6. முடக்கு வாதம்


யூனியன் கல்லூரி வளாகக் காணிக்கு முடக்கு வாதநோய் பிடித்திருக்கிறது. வைத்தியத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக அதன் வளாகம் அமைந்த காணி உள்ளது. அந்த வியாதிக்குப் புதிதாக எனது காலத்தில் இணைத்த திறந்தவெளி அரங்கப்பகுதி அமைந்த காணி அடங்காது. அது சுமார் எட்டுப் பரப்பு இருக்கவேண்டும். இப்பொழுது திறந்தவெளியரங்கு அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமான பனையடைப்பாக விருந்தது. அதனை வளாகத்தோடு இணைக்க ஒரு சந்தர்ப்பம் தேடிவந்தது. தெல்லிப்பழைக் கிராமச் சங்கம், சந்தியில் ஒரு நூல் நியைம் அமைக்க, யூனியன் கல்லூரிக்கு அங்கு இருந்த விடுதிக் காணியில் கிழக்கு வளத்தில் ஒரு காணித்துண்டு தரும்படி கேட்டார்கள். குறித்த பனையடைப்பை, உரிமையாளரிடம் விலைக்கு வாங்கி எமது கல்லூரிக்குத் தந்தால், தருவதாக ஒப்புதல் கொடுத்தேன். அவர்களே காணி கைமாறுவதைத் துரிதப்படுத்தினார்கள். பனையடைப்பு யூனியன் கல்லூரி வளாகத்துடன் இணைக்கப்பட்டது. பனைகளை வேரோடு சாய்த்துத் திறந்தவெளியரங்கு அமைத்த விறுவிறுப்பான மீதிக் கதை பின்னர் சொல்லப்படும்.

Sunday 11 September 2016

’அக்கினிக்குஞ்சு’ இணையத்தள ஆசிரியர் யாழ்.பாஸ்கரிடம் நான் முன் வைக்கும் சில கேள்விகள்


 









1.   நீங்கள் வெளியிட்ட ‘அக்கினிக்குஞ்சு’ சஞ்சிகை பற்றி – உங்கள் நெஞ்சில் வரும் அந்தக்காலத்து நினைவுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

2.   ’அக்கினிக்குஞ்சு’ சஞ்சிகை நின்று போனதற்கான காரணங்கள் எவை எனச் சொல்வீர்கள்.


3.   ஒரு எழுத்தாளர் சஞ்சிகை நடத்துவதற்கு (இணையம் ஆயினும் சரி) தமது நேரத்தை ஒதுக்குவதனால், அவர் தனது எழுதும் நிலையிலிருந்து விடுபட்டுப் போகின்றார் என்று சொல்வது பற்றி…

Friday 9 September 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (17) - மெளனம் கலைகிறது (2)


தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் (2015) கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற எழுத்தாளர்விழாவில், இலக்கியக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் சில புத்தகங்கள் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சங்கம் ஏற்றுக்கொண்டதன்படி, நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

ஏறக்குறைய ஆறுபுத்தகங்கள். என்னுடைய சிறுகதைத்தொகுப்பு அதில் இரண்டாவதாக இருந்தது. நிகழ்ச்சி நடந்தபோது எல்லாம் தலைகீழாக்கப்பட்டு, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு கடைசியாக வந்தது.

Wednesday 7 September 2016

ஒரு மனிதன் பல கதைகள் - சிறுகதை



மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும்.

Saturday 3 September 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி 
நினைவுகள் பதிவுகள்

 5. ஆட்டுத் தீர்த்தமும் கிணற்று நீரும்


     பௌதிகச் சூழல் சம்பந்தமான மூன்றாவது பிரச்சினை நாலுகால் விலங்குகளின் பிரச்சினையாக இருந்தது. வளாகத்தின் வடபகுதி வேலியூடாக அயலட்டையில் உள்ள ஆடுகள் யாவும் இரவில் வந்துவிடும். ஒரு இருபத்தைந்து முப்பது பார்க்கலாம். அவை இரவில் உறங்குமிடம் விஞ்ஞான ஆய்வுகூட விறாந்தை, அதன் வடக்கே உள்ள உயர்தர வகுப்பு வகுப்பறைகள். அவை கொட்டிய கறுப்புப் பிளுக்கைகள் விறாந்தை நீளத்துக்கும் வகுப்பறைகளிலும் பரந்து காணப்படும். அந்தப் பக்கம் கால் வைத்தால் ஆட்டுத் தீர்த்த வாசனை ஆசிரியர்களையும் மாணவர்களையும் வரவேற்றது. சில குளப்படியான ஆடுகள் ஆசிரியர் மேசையிலேயே ஏறித் துயின்றது போதாதென்று, தீர்த்தம் தெளித்திருக்கும். மீன் கூடைக்காரிக்கு மீன்வாசம் என்ன தோசமா? அவர்களும் பழக்க தோசத்திற்கு ஆளாகியிந்தார்களோ? தோட்ட வேலைக்குப் பொறுப்பான திரு. கதிரனின் முதல் வேலை அவற்றைச் சுத்தம் செய்வதே. வகுப்புகளுக்கு மாணவர்கள் வரமுன்னர் செய்து முடிக்க வேண்டும். திரு. கதிரனைச் சிலவேளைகளில் காலையில் பாடசாலை அடைந்ததும் காண முடிவதில்லை. சற்று பிந்தி வந்ததை விசாரித்தால்,

Thursday 1 September 2016

புறமோஷன்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

கோகுலனும் தீபனும் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஒன்றாக ஒரே பாடசாலையில் பிறைமரியில் சேர்ந்தார்கள். 

சேர்ந்த சிறிது காலத்தில் கோகுலன் உட்பட நான்கு மாணவர்கள் வகுப்பேற்றப்பட்டார்கள்.

தீபனின் அம்மா, தனது மகனையும் வகுப்பேற்றும்படி ஆசிரியரிடம் கெஞ்சினார்.

“நன்றாகப் படிக்கக் கூடியவர்களை மாத்திரம் வகுப்பேற்றினோம்”  ஆசிரியர் மறுத்துவிட்டார்.

இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள். தயவு செய்து தீபனையும் வகுப்பேற்றுங்கள், இல்லாவிட்டால் கோகுலனை வகுப்பு இறக்கி விடுங்கள்

ஆசிரியர் திகைத்துப் போனார்.

கங்காருப் பாய்ச்சல்கள் (16)

மெளனம் கலைகிறது (1)

சிறுவயதில் பாடசாலை செல்லும் காலங்களில் பெரும்பாலும் நடந்தே செல்வோம். சில பொழுதுகளில் வேலிகளில் இருக்கும் ஓணான்கள் தரை இறங்கி வேகமாக எம்மைக் கடிக்க வருவதுண்டு. பின்னர் என்ன நினைத்தோ வந்த வேகத்தில், திரும்பப் போய் வேலிகளில் ஏறிக்கொள்ளும். பின்னர் மீண்டும் பாடசாலை முடித்து திரும்ப வீடு வரும்போது மீண்டும் இதே சேஷ்டையை இந்த ஓணான்கள் செய்யும். கடவுள் ஓணான்களுக்குக் கொடுத்த வரம் இது. இதேபோல சில ‘ஓணான் மனிதர்களை’ நான் இங்கே சந்தித்திருக்கின்றேன்.

Thursday 25 August 2016

His Royal Highness,The Tamil Tiger - FICTION

 
by
Kathir Bala Sundaram

Chapter 14

The Love Trap

Lieutenant Earless couldn’t shake the image of that beautiful girl from his mind. Since that day when he had accompanied the Minister of Political Affairs to Vembady Girls’ College, the picture of the tall, thin girl dominated his mind. He could still see Sendhoory’s two long plaits dancing around her shoulders and breasts—an image that had nearly driven him mad with lust at the very first sight of her. From that moment on, the beautiful angel had captivated his eyes and imagination.
In the following weeks, he even went so far as to pen some verses of poetry about her.
All the stars in the sky shine with thy face
Bouncing braids make my heart race.
My dearest angel, I would kiss you all the night
Come down, my love, and make my heart right.

A few of his subordinates were aware of his madness, but being that the Lieutenant was a well known womanizer, they passed it off as a flight of fancy that would be swallowed up like footprints in a swamp.