Wednesday 16 December 2015

அவரைப் போல

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 3

பொங்கல் அன்று தவம் கோயிலுக்குப் போனபோது, மனைவியின் கைப்பையை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அது அவரது தோள்ப்பட்டையில் இருந்து ஊஞ்சலாட்டம் ஆடியது.

அந்தக் காட்சியை பல இளம் பெண்கள் பார்த்து விட்டார்கள்.

“எங்களுக்கும் அவரைப் போல மாப்பிள்ளை வேணும்” என்று தமது பெற்றோரிடம் அன்புக் கட்டளை இட்டார்கள் அவர்கள்.


No comments:

Post a Comment