Wednesday 13 May 2015

உள்ளங்கையில் உலகம்



நிமிர்ந்து நில் - வானம்
உனக்குத்தான்.
சுழலுகின்ற உலகம் - உன் கைகளில்
காதலும் கத்தரிக்காயும்
கடைந்தெடுத்த பூசணிக்காயும்
காகிதத்தில் கவிதைகள்

நீண்ட இரவும் தெருநாயின் ஓலமும்
நிணமும் சதையும்
நிதமும் கவலைகள்

பரமார்த்தகுருவின் சீடர்கள்
காவி உடை தரித்து
பார் ஆளுகின்றார்கள்

முகத்துக்கு புகழ்மாலை கழுத்துக்கு
பூமாலை புறமுதுகுக்கு விஷமிட்ட
கத்தி - என மனிதர்கள் விலாங்கு
மீனாகப் பழகிக் கொண்டார்கள்

காலம் மாறிய கடுகதி வேகத்தில்
கலி கூப்பிடுதூரம் - நாளொரு நாடு
நடுக்கடலில் அணு பிளக்கும்

ஓர் பொழுதில் உள்ளங்கையில்
'மவுஸ்' அழுத்தி ஒரு 'க்ளிக்' செய்தே
உலகத்தைப் பிளக்கும் வரை

நி
மி
ர்
ந்
து

நி
ல்

அப்புறம்
வானம்
 மட்டும்தான் உனக்கு!



                                                                                                                          

No comments:

Post a Comment