Monday 29 December 2014

"சேர்ப்பிறைஸ் விசிட்"


நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் பேசும் தருணங்களாகவோ அல்லது இன்னும் ஏதாவது பூடகமான விஷயங்களாகவோ அவை அமையலாம். சில பொழுதுகளில் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல முன் வந்து நிற்பார்கள்.

அப்படித்தான் ஒருநாள் இராசலிங்கமும் அவர் மனைவி சுலோசனாவும் திடீரென்று, நினையாப் பிரகாரமாக சிறீதரனின் வீட்டிற்கு  தரிசனம் கொடுத்தார்கள். சிறீதரனின் மனைவி பவானி முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு அவர்களை வரவேற்றாள்.

"கனகாலமா வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு" என்று 'சும்மா'வைச் சற்று அழுத்திச் சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து,

"அப்பிடியெண்டில்லை. இனி ஈஸ்ரேண் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப் பதினைஞ்சு டொலர் பெற்றோலுமெல்லே செலவாகுது" காசைக் காரணம் காட்டினாள் சுலோசனா.

"நாங்கள் நினைச்சோம்... உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு" உதட்டுக்குள் சிரித்தாள் பவானி.

வன்னி / அதிகாரம் 10 / கதிர் பாலசுந்தரம்


வீரத் தலைமுறை
அப்பாவுக்கு உள்@ரப் பிள்ளைகள் எல்லோரிலும் சிறிய சந்தேகம். ஒரு நாள். 'நான் றெடி" என்று சொன்ன தொனியிலேயே அவருக்குச் சந்தேகம். அப்படியிராது என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார். அரசியலில் ஊறிப் போன ராச நாச்சியார்வம்சம்.


சித்தப்பா குடும்ப பேரழிவின் இரண்டு தலை முறைகளுக்கு முன்னரே தாத்தாவையும், பெரிய தாத்தாவையும் தமிழர் விடுதலைப் போர்க்களத்தில் தியாகம் செய்த வம்சம்.

தாத்தா துரோணர் கதை: கொழும்பு கால்பேஸ் திடலில் நடந்த தமிழ் மொழி உரிமைக்காக தமிழ் அரசுக் கட்சி மேற்கொண்ட சத்தியாக்கிரகத்தில்---1956---தாத்தா கலந்து கொண்டார். அன்று மாலை வெள்ள வத்தையில் சவோய் தியேட்டர் முன் நடந்து கொண்டிருந்தார். சத்தியாக் கிரகத்தின் வேளை அவரை உதைத்த ஒற்றைக்கண் சிங்களக் காடையன் கண்டு விட்டான். 'உவன் கால்பேஸ் திடலில் காலையில் சத்தியாக்கிரகம் செய்த பறத் தெமில,திராவிடயோ. அடித்துக் கொல்லுங்கள்" என்று கர்ச்சித்தான்.

Monday 22 December 2014

வன்னி - (அதிகாரம் 9) - கதிர் பாலசுந்தரம்

நான் செத்துப் போவன்

எங்கள் குடும்ப மாடுகள் மேய்ச்சல் முடிந்து வீதி வழியே  தொழுவம் திரும்புகின்றன.

எண்பது மாடுகளில் கால்வாசியைக் காணவில்லை. ஐந்து மாடுகள் போரின் வேளை பட்ட காயங்கள், அவய இழப்பால் உபாதையோடு நகர்கின்றன. மூன்று காலில் இரண்டு வளர்ந்த நாம்பன் கன்றுகள். எரு(த்)து மாடுகள் ஒன்றையும் காணவில்லை. இறைச்சிக்கு முடித்து போட்டார்கள். வேறுயார் இங்கே மாட்டிறைச்சி சாப்பிடுகிற மனுசர்? வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போனதும் உண்டு. கொழும்புப் பக்கமிருந்து பழைய இரும்பு தேடி வருகிறவர்கள் அந்த வியாபாரத்தோடு பக்கத் தொழிலாக மாட்டு வியாபாரமும் செய்கிறார்கள். முதலில்லாத கொழுத்த வியாபாரம்.

'சிவகாமி எப்படிச் சுகம்?" வினாவியபடி சுசீலா அக்கா கூடாரத்துள் நுழைந்தார்.
'வாங்க சுசீலா அக்கா. உதிலே இருங்கள். நிரம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறியள்."
'நேரம் இல்லை. பின் வளவு துப்பரவாக்கிறன். வளவுக்கை தோட்டம் செய்யப் போகிறன். நீர் இறைக்க பம் தந்திருக்கினம். மிளகாய் நடலாம் என்று யோசிக்கிறன்."

Sunday 21 December 2014

அந்நிய - உறவுகள்


 சிவநாதன் குடும்பத்தினர் இன்னும் மூண்றுமணி நேரத்தில் மெல்பர்ண் மாநகரில் கால் பதித்துவிடுவார்கள்.  அவர் மனம் 'எயர்போட்டில்' தனக்கு நடக்கப்போகும் வரவேற்பை எண்ணி மகிழ்கிறது. மகிழ்ச்சி வாய்வழியே வந்து இதழோரம் புன்முறுவல் பூத்து நிற்கின்றது. மனைவியும் பிள்ளைகளும் வரவேற்பில் திக்குமுக்காடித் திணறப்போகின்றார்கள். இருக்காதா பின்னே! சிவநாதனுக்கு மெல்பர்ணில் இரண்டு அண்ணன்மாரும் ஒரு தங்கையும் இருக்கின்றார்கள் அல்லவா? அவர்களின் அன்புத்தொல்லைக்கு அணை போட முடியாதல்லவா? 'என் வீட்டில் நில்; உன் வீட்டில் நில்' என்று  போட்டி போட்டுக் கொண்டு இவர்களின் காலைக் கையைப் பிடிச்சுக் கெஞ்சப் போகின்றார்கள்.

'எயர் நியூசிலாண்ட்' தனது சில்லுகளை உரசி 'ரன்வேயிலிருந்து' மேலெழும்புகிறது. சிவநாதன் இலங்கையிலிருந்து நியூசிலாந்திற்கு வந்தபோது 'எயர்போட்டில்' நடந்த கலாட்டாவை நினைத்துப் பார்த்தார். வாய்விட்டே சிரித்துவிட்டார்.

Monday 15 December 2014

வன்னி - (அதிகாரம் 8) - கதிர் பாலசுந்தரம்

பட்ட காலிலே படும்
காலையில் பாடசாலைத் திறப்பு விழா. பிரதம விருந்தினர் கேணல் ரணவீர, மனையாளுடன் வந்தவர். சிவில் உடை. நீல கோட் சூட். மனைவி அநுலா கண்டியன் பாணியில் அரையைச் சுற்றி அகன்ற கொய்யகம் வைத்த நீலச் சேலை. கழுத்து முன்பக்கம் பின்பக்கம் இரண்டும் ஓவென்று ஆழவெட்டிய வெள்ளைச் சட்டை. சிங்கள மங்கையர்களுக்கு அப்படிச் சட்டை போட்டுக் காட்டுவதிலே அலாதி பிரியம். நோநாலேசான கறுப்பு. மெல்லிய மஞ்சள் சின்னப் பற்கள்.பென்னாம் பெரிய கொண்டை. அந்த வட்ட முகத்திலே ஏதோ அள்ளிப்பூசி யிருந்தது. யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் விளங்கயில்லை.

நச்சுப் புடையன் கேணல் ரணவீரவின் மெய்ப்பாதுகாப்பு ராணுவத்தினர். சீருடையில். இருபது பேர் வரையிருக்கும். சற்று எட்ட நின்றார்கள்.

Monday 8 December 2014

வன்னி -(அதிகாரம் 7) - கதிர் பாலசுந்தரம்

சுனாமி கருக்கட்டுகிறது

காலை பத்து மணி. வீதியில் என்ன வித்தியாசமான மனித நடமாட்டம்? கூடாரத்து வாசலில் நின்றபடி அவதானித்தேன்.

வளவு வாயிலில் இரண்டு புதிய வாகனங்கள். கொழும்பு மாநகர இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலக வாகனம். வெள்ளை வண்ணம். இன்னும் கறுப்பு ஒன்று. ஐவர் வாகனங்களால் இறங்கி என் வளவுக்குள் கால் வைத்தனர்.
கண்கவரும் மேலை நாட்டு உடைகள். கறுப்பு சப்பாத்துக் கால்களை வேமாகத் தூக்கி வைத்து விரைந்து உள்ளே வந்தனர். ஏதோ அவசர காரியத்துக்குப் போகிறவர்களைப் போல முகங்கள் உசார் நிலையில் காட்சி தந்தன.

கூடாரத்துக்கு மேற்கே புதிதாக எழுந்து கொண்டிருக்கும் வீட்டுப் பக்கம் போனார்கள். அத்திபாரத்தைப் பார்த்தனர். ஒருவர் ஏதோ குறிப்புகள் எழுதினார்.

Sunday 7 December 2014

கங்காருப் பாய்ச்சல்கள் (-8)

வீணாகப் போகும் மருந்துகள்

ஒருமுறை எனது குடும்ப வைத்தியர் Prednisolone என்ற மருந்தை எழுதித் தந்துவிட்டு அதை எப்படிப்பாவிப்பது என்று ஒரு சூத்திரத்தையும் போட்டுத் தந்தார். முதல் 3 நாட்களும் ஒவ்வொருநாளும் 3 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொருநாளும் 2 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொருநாளும் 1 குளிசை வீதமும், அடுத்த 2 நாட்கள் ஒவ்வொருநாளும் பாதிக்குளிசை வீதமும் எடுக்க வேண்டும். அந்த மருத்தின் பக்கவிளைவுகள் பற்றியும் திகிலூட்டினார். எப்படித்தான் கூட்டினாலும் மொத்தம் 16 குளிசைகள்தான் எனக்குத் தேவைப்படும். பார்மஷியில் 60 குளிசைகள் கொண்ட மருந்துப்போத்தல்தான் இருந்தது. மிகுதியை என்ன செய்வது? வைத்திருந்து மீண்டும் தேவைப்படும்போது பாவியுங்கள் என்றார் அங்கிருந்த பாமஷிஸ்ற். போத்தலில் முடிவு திகதி (expiry date) ஒரு வருடம் என்றிருந்தது. பிறகு எனக்கு அது தேவப்படவில்லை. expiry date வரும் வரையும் வைத்திருந்துவிட்டு எறிந்துவிட்டேன். மருந்துகளின் விலை இப்போது எக்கச்சக்கம். என்ன செய்வது? தேவைப்படும் அளவுக்கு மருந்து வாங்கமுடியாததால் மருந்தும் காசும் வீண் விரயமாகின்றன.

கங்காருப் பாய்ச்சல்கள் (-7)

நீர் சேமிப்பு

மனிதர் வாழும் கண்டங்களில் மிகவும் வரண்டது அவுஸ்திரேலியா. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது. அதனால் நீர்க்கட்டுப்பாடும் அமுலில் உள்ளது.

ஒருமுறை வீட்டிலிருந்த ஒவ்வொரு தண்ணீர்ப் பைப்பிற்குக் கீழும் ஒவ்வொரு பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாடசாலையில் மகனுக்கு ஒரு புரயெக்ற் (project) கொடுத்திருந்தார்கள். வீணாகப் போகும் தண்ணீரின் அளவை மில்லி லீற்றரில் அளவிடும் முறை அது.

மறுநாள் காலை

Wednesday 3 December 2014

டோர்ச் லைட் - சிறுகதை

 
தெல்லிப்பழை
1983,12-01

அன்புமிக்க மகன் விநோ அறிவது,

நாங்கள் அனைவரும் நற்சேமமாகவுள்ளோம். அதுபோல் நீயும் சேமமாகவிருக்க விநாயகர் அருளை வேண்டியிருக்கிறேன்.

மேலும் நீ ஒரு 'ரோச்லைற்' வாங்கப் போவதாகவும், இருளிற்குள் செல்லப் பயமாகவிருக்கிறதென்றும்  கடிதத்தில் எழுதியிருந்தாய். அப்படி இருளில் எங்குதான் போகின்றாய்?

தந்தையின் வழியில் - சிறுகதை



அது ஒரு காலைப் பொழுது. வெறுமை என்னும் சுமையைச் சுமக்க மாட்டாமல் குஞ்சு நடந்து கொண்டிருந்தாள். நடை என்னும் பதத்திற்கு அர்த்தத்தைக் கற்பிக் காமல் இயங்க மறுத்த கால்கள் முன்னும் பின்னும் கோணி நெளிந்தன.

                காலை இரை குஞ்சுவிற்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவள் வயிறு வெறுமை அடைந்திருக்காது. இப்பொழுது ஒரே பசி!

இனி ஒரு விதி செய்வோம்! - சிறுகதை



              













 ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
  கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
  கோடி என்றால் அது பெரிதாமோ?’
-              பாரதியார்

அவர்கள் சூனிய வெளியையே நித்தமும் தரிசனம் செய்பவர்கள். நாளைய பொழுதை ஒருபோதுமே நினைத்துப் பார்க்காதவர்கள். இருட்டு உலகிலே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் மனம் - உறுதி கொண்டது, தெளிவானது, சலனமற்றது, ஒரு கட்டுக்கோப்புக்குள் அடங்கியது.

Monday 1 December 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 6) - கதிர் பாலசுந்தரம்

மிருகங்கள்

கூடார வாசலில் நிற்கத் தெரிகிறது. உயர்ந்து வளர்ந்த வெள்ளைக்காரன் ஒருவனும் தெரிகிறான். இரண்டு மூன்று புதிய வாகனங்கள் பாடசாலை வாயிலில். பெரிய உத்தி யோகத்தர்கள் போலவிருக்கிறது. கொடுத்த நன்கொடைக்கு வேலை நடக்குதோ என்று கணக்குப் பார்க்க வந்திருக்கிறார், கொழும்பு ஜேர்மன் அரசதூதுவர்.

பாடசாலைக் கட்டிடச் சுவர்கள் பூரணமாக எழுந்து நிற்கின்றன. டானா வடிவில். யன்னல் கதவு வைக்கும் இடைவெளிகள் தெரிகின்றன. வகுப்பறைகள், அலுவலகம், விஞ்ஞான ஆய்வு கூடம், அதிபர் விடுதி. பொலிவாக அழகாக இருக்கப் போகிறது.

Sunday 23 November 2014

ஒரு கடிதத்தின் விலை!

"உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு 'கேர்ள்' போட்டிருக்கின்றாள்" தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது

வழமைக்கு மாறான ஒரு கடிதம். கடிதத்தின் 'கவரில்' இருந்த பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது ஒரு இளம்பெண்ணின் கடிதமாகத்தான் இருக்க வேண்டும். ஊகம் சரியானதுதான்.

வாசித்த நேரத்திலிருந்து மனம் கிளுகிளுப்பாக இருந்தது. இற்றைவரைக்கும் எனக்கு ஒரு காதல் கடிதம் கிடைத்ததில்லை. 

நாற்பத்தெட்டுக்கும் பத்தொன்பதிற்கும் இடையே எவ்வளவு இடைத்தூரம். வயதைத்தான் சொல்கின்றேன். கடிதத்தை அப்படியே இங்கே தருகின்றேன். அதில் எந்தவித புனைவிற்கும் இடமில்லை. கடிதத்தில் குழந்தமைத்தனம் இருந்தால் மன்னிக்கவும். அது அவளைச் சார்ந்தது.

வன்னி - நாவல் (அதிகாரம் 5) - கதிர் பாலசுந்தரம்

அகதிக் கப்பல் 

கிணற்றின் அப்பால், கிளைகள் முறிந்த மாமரம். அதன் கீழ் நின்று வீதிக்கு மறுபக்கம் அமைந்த பாட சாலையைப் பார்த்தேன். அத்திவராம் போட்டு முடிந்திருந்தது. வேலை மும்முரமாக நடந்தது.

தற்காலிக ஓலைக் கொட்டில்களில் பாடசாலை.

பாடசாலை முடிந்து மணி டாம் டாம் என்று ஓங்கி ஒலித்தது. கூய்ச்சல் காதை அடைக்க மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறினர். யாவரும் சீருடையில். ஆண்கள் நீல கட்டைக்காற்சட்டை வெள்ளை சேட். பெண்கள் வெள்ளை கவுன். கழுத்தில் வான் நீலரை.

Monday 17 November 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 4) - கதிர் பாலசுந்தரம்

வானரங்கள்

கதை கேட்க வருவதாகக் கூறிய பிள்ளைகள் வருவார்களோ வரமாட்டார்களோ என்று மனம் விசாரணை செய்தது.
புதன்கிழமை. மாலை வேளை. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. காலை முழுவதும் மழை கொட்டியது. கிறவல் வீதியை மூடி காட்டு வெள்ளம் கரடியன்குளத்தை நோக்கிப் புரண்டு பாய்ந்து கொண்டிருந்தது. ஆளை மோதி விழுத்தும் வேகம். இப்பொழுது கான் நீளத்துக்கு வெள்ளம் ஓடுகிறது.
தார்ப்பாய்க் கூடார வாசலில் நின்று எட்டிப் பார்த்தேன். ஓடிஓடி வந்து கொண்டிருந்தனர்.

Friday 14 November 2014

ANNTENAS GOING UP AND UP - short story


Published in the magazine AMIRTHAGANGAI in January 1986.

Editor: Chembian Selvan (Rajagopal)

Chenkai Aliyan in his book ‘History of Short stories’ says, “This story is one of the best of the year 1986.”

Translated by the author: Kathir Balasundaram

SITUATION: In the late 1970s, low-income people started going to the Middle-East in the effort to find higher paying jobs. They returned home wealthy, and spent an immense amount of money purchasing lands and building luxurious mansions. They spent lavishly to flaunt their new status. During this same time, TV was introduced to Jaffna.
This story portrays the attitude of these newly wealthy people of the Jaffna district, trying to lift up their social status.
                             
               ANNTENAS GOING UP AND UP
                         KATHIR BALASUNDARAM

The malicious gossip began from the shadow of the arjuna tree growing in the back-yard of Pillayar temple. From there, it spread all over the village of Veemankamam.

“There is a rumour that Mohan is the guy who wrote the anonymous letter,” Visaladchi commented. “It was the reason why Kilikunchu Komathy’s arranged engagement fell apart.” Visaladchi was a lean, tall, middle-aged woman carrying a kadakam (a box made of palmyrah leaves) on her hip. She gazed at Kanagam, a woman of her age, but dark and short in contrast.

Thursday 13 November 2014

அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் - பகுதி 3

(சிறப்பிதழ்கள் ஊடான ஒரு பார்வை) 

அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி  போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது.

ஜீவநதிஅவுஸ்திரேலியா சிறப்பிதழ்


(திரு செல்வ பாண்டியன் அவர்களால் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் 12வது எழுத்தாளர்விழாவின்போது வாசிக்கப்பட்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள், அவரது அனுமதியுடன் இங்கே தரப்படுகின்றது. நன்றி.)

---இச்சிறப்பிதழில் உயிரோட்டமுள்ள சிறந்த பதினொரு  கட்டுரைகளும் ஆறு சிறுகதைகளும் மொழிபெயர்ப்புக்கவிதை உட்பட ஐந்து கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

கிடுகு வேலிக்கும் கண்கள் உண்டு



தொழிற்சாலை அருகில் இருப்பதால் மதியம் வீட்டிற்கு சாப்பிட வருவது வழக்கம். சாப்பிட்டு விட்டு சைக்கிளை மிதிக்கின்றேன். 

வாசிகசாலை அருகில் ஒரு பெண் சைக்கிளுடன் தயங்கியபடியே நிற்கின்றாள். கைகளை பாதி நீட்டியும் மீதியை ஒளித்தும் வைத்தபடி "அண்ணா... அண்ணா... ஒரு உதவி" என்கின்றாள். பாடசாலை விடுமுறை. வர்ணக்கலவையில் அழகாக நிற்கின்றாள். சைக்கிள் காற்றுப் போய்விட்டதாகவும் தெரியவில்லை. அருகில் நிறுத்துகின்றேன்.

"அண்ணா...! என்னுடைய வீடுவரைக்கும் என்னுடன் கூட வரமுடியுமா?"
"ஏன்? எதற்கு?"
"என்னை ஒருவன் பின்னும் முன்னும் துரத்துகின்றான். தொந்தரவு செய்கின்றான்."

Monday 10 November 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 3)

எரிமலை

இன்னும் எத்தனை தினங்கள் இந்த இடிந்த பாடசாலைக்குள் தங்குவது? மாடுகள் வந்து இரவில் தூங்குகின்றன. அரைவாசியும் எங்கள், ராச நாச்சியார் வம்ச மாடுகள். கருமை மெல்லிதாகக் கலந்த சிவப்பு மாடுகள். பூர்வீகம் பாகிஸ்தானின் சிந்து மாகாணம். இடைவெப்ப வலைய ஜேர்சி இன ஐரோப்பிய மாடுகளுடன், வட இந்தியாவில் வைத்து இனப் பெருக்கம் செய்து பெற்றவை. பால்வளம் மிக்கவை. தாத்தா துரோணர் அறிமுகம் செய்தவை.மேய்ச்சல் முடிந்து வருகின்றன.

Saturday 8 November 2014

அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் - பகுதி 2

(சிறப்பிதழ்கள் ஊடான ஒரு பார்வை )

அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி  போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது.

Monday 3 November 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 2)

அதிகாரம் 2
அம்மணி நல்ல அழகு

காட்டுச் சேவல் கூவுஞ் சத்தம் காதை எட்டியது. விடிந்து கண்விழித்து
எழுந்து கறுப்புப் போர்வைக்குள் குந்தினேன். எதிரே ஒரு கருமுண்ட
மேகம்சுருண்டுநிற்பது அப்போது புரியவில்லை.

தலையை நிமிர்த்தினேன். நீல வானம் காட்சி தந்தது. சூரியன்
நடுவான் நோக்கிப் பிரயாணித்துக் கொண்டிருந்தான்.

எனக்கு மட்டும் எதுவும் விடியவில்லை. சிறையில்கூட முகங்கழுவ,
குளிக்க நீர். அளந்த உணவு தவறாமல் தருவார்கள். மயக்கம்
போடாமல் சீவிக்கலாம்.

Saturday 1 November 2014

TWO EPISODES - short story

Written by- K.S.SUTHAKAR
Translated into English by KATHIR BALASUNDARAM


Human rights activist and writer Kathir Balasundaram, B.A., S.L.E.A.S., is a former Principal of celebrated Union College in Jaffna, Sri Lanka and now living in Canada.




INCIDENT ONE

It all took place in the month of May, 1983.

Those of us selected by the Engineering Faculty to attend the celebrated Peradeniya University found rooms in either the James Peris (J.P.), Hilda and Obryasekara men residence halls or the Sangamitta and Ramanathan Residence Hall for women.

Our studies began well, and we threw ourselves into them enthusiastically. Each residence hall had a cafeteria, and we found entertainment by pulling pranks on the cashiers and servers.

The J.P. residence hall was situated on a hill and looked elegant from any angle. Only two tracks went up to the residence hall there, but travelling a bit higher on the hill, stood the Marcus Fernando hall of residence. This housed cooking facilities where experts, capable of cleaning rice or dhal using a sieve, worked. They typically ate while they cooked and they belonged to the arts faculty.

அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் - பகுதி 1

(சிறப்பிதழ்கள் ஊடான ஒரு பார்வை - )

அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி  போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது.

கங்காருப் பாய்ச்சல் (-6)

உயிர்ப்பு

அவுஸ்திரேலியா பல்லின மக்கள் வாழும் நாடு. அவரவர் கலாசாரம், பண்பாடுகளை மதிக்கும் நாடு.

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் 'டியர் பார்க், ஓக்லி' நூல் நிலையங்களில் (Deer Park, Okleigh) தமிழ்ப்புத்தகங்களை வைத்திருக்கின்றார்கள். ஒருநாள் எங்கள் வீட்டிற்கு சமீபமாக இருக்கும் பெண் ஒருவர், சுமக்க முடியாமல் நிறையத் தமிழ்ப்புத்தகங்களை நூல் நிலையத்திலிருந்து எடுத்துச் செல்வதைக் கண்டேன்.

"என்ன நிறைய தமிழ்ப்புத்தகங்கள் படிக்கின்றீர்கள் போல?"

Monday 27 October 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 1)



மனித உரிமை ஆர்வலர் கதிர் பாலசுந்தரம். பிரபல தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் நாவல் எழுதும் புலம்பெயர்ந்த கனடாவாழ் எழுத்தாளர்.

பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்து
இருபத்தாறு நீளாண்டுகள் போராடி முடிந்து
தமிழ்ஈழ சுதந்திரப்போர் தோல்வியில் முடிந்து,
ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து,
புனர்வாழ்வு பூர்த்தி செய்து அழுதழுது வெளியே வரும்
மேஜர் சிவகாமி கூறும் குருதி சொட்டும் நவீனம்.

புகலிட இலக்கியத் தளத்தில் இதுவரை இத்தகையதொரு சிறந்த வரலாற்று நவீனம் வெளிவரவில்லை என்பது எனது கணிப்பாகும். -          பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம்


அதிகாரம் 1

அதிர்வலைகள்

தலைமுறைகள் மூன்றின் முன்னரே
ராச பாரம்பரிய வழிவழி வந்த
வன்னி 'ராச நாச்சியார் வம்சத்தை"
வரித்துக்கொண்ட சுதந்திர தாகம்
சிவகாமியை போர்க்களம் அழைக்கிறது.

பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்து
இருபத்தாறு நீளாண்டுகள் போராடி முடிந்து
தமிழ்ஈழ சுதந்திரப்போர் தோல்வியில் முடிந்து,
ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து,
புனர்வாழ்வு பூர்த்தி செய்து அழுதழுது
வெளியே வருகின்றாள், மேஜர் சிவகாமி.

ஊன்று கோல் இருகை பற்றி
பிறந்து வளர்ந்த வன்னி மண்ணின்
சிவந்த வீதியில் ஒருகால் நின்று
அழிந்து மறைந்துபோன நாச்சியார் வம்ச
மூன்று தலைமுறை நீள் கதையை
ஆரம்பிக்கின்றாள் மேஜர் சிவகாமி.

Sunday 19 October 2014

உயர உயரும் அன்ரனாக்கள் - கதிர் பாலசுந்தரம்

        
 

பிள்ளையார் கோவில் பின் வீதியில், குளத்தோரம் நின்ற மருதமர நிழலிலிருந்து தெறித்துப் பறந்த சொற்கள் வீமன்காமம் கிராமம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

மோகன்தான் மொட்டைக் கடிதம் எழுதினவனாம். அதனாலேதான் கிளிக்குஞ்சு கோமதியின்டை கலியாணம் குழம்பினதாம்.இவ்வாறு பொரிந்தபடி - கக்கத்துள் வெற்றுக் கடகத்தை அணைத்தபடி நின்ற, ஒல்லியான வலித்த விசாலாட்சி தனது வயதை ஒத்த குள்ளமான கருமையான கனகத்தைப் பார்த்தாள்.

மேலே மருதங் கொப்பொன்றில் ஒரு கிழிப்பொந்து. அதன் வாயிலோரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இரு மருதங் கிளிகளையும் பார்த்தபடி கனகம் ஈனக் குரலில்,

மோகன்தான் மொட்டைக் கடிதம் எழுதினவன். இப்படி நான்தான் கதைகட்டினதென்று கடைசியிலே கதை வரும். மோகன்டை அப்பன் மறியலிலேயிருந்து வந்த சண்டியன். என்னை வம்பிலை மாட்டாதை விசாலாட்சிஎன்று கூறிவிட்டு - கையை நீட்டி ஏதோ உளறியபடி - ஒழுங்கையில் குடுகுடு என்று வந்து கொண்டிருந்த, பச்சைச் சேலை அணிந்த கொஞ்சம் குண்டான சிவகாமியைப் பார்த்தாள்.

கோண்டாவில் டாக்டர் மாப்பிளை, டட்சன் கார் கேட்டவராம். அதாலே தான் கலியாணம் குழம்பினதாம்.என்று உரத்து இரைந்தபடி சிவகாமி அவ்விடம் வந்து சேர்ந்தாள்.

Saturday 18 October 2014

எதிர்கொள்ளுதல்



கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது.

"அக்காவிற்குக் கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால் நல்லது."

இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவென்றாலும் அக்காதான் போடுவா. அத்தான் எழுதின கடிதத்தின்ர சுருக்கத்தில இருந்து நிலமையைப் புரிஞ்சு கொண்டன். அக்காவின் கடைசிப் பக்கங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடிதம் கிடைச்ச மூண்டு நாளைக்குள்ள அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிக்கிட்டு சிறீலங்கா வந்திட்டன். வடபகுதி நிலமையள் மிக மோசமா இருந்தன. நாலு கிழமையா பலாலிக்கான விமானப் போக்குவரத்து நடக்கேல்லை. வடபகுதி முற்றாக ஏனைய பகுதிகளிலையிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

Friday 10 October 2014

பேசும் தமிழ்

நேரம் பிந்திவிட்டது. நிகழ்ச்சி - தமிழ் விழா. ஆரம்பிக்கும் நேரம் ஆறு மணி. இப்போது நேரம் - ஆறு ஐந்து. மனைவியின் 'கடைசி நேர அலங்காரத்தினால்' நேரம் கொஞ்சம் பிந்திவிட்டது.

"எப்பத்தான் உங்கடை புறோகிறாம் நேரத்துக்குத் துவங்கியிருக்கு!" - இது மனைவி திலகா.
உண்மைதான். அந்த நேரம் பிந்துதலும், இந்த அலங்காரம் பிந்துதலும் ஒன்றாகப் பொருந்துமானால், ஒருவேளை நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்குப் போகலாம்.

மகள் வெளிக்கிட்டு, சலங்கை கட்டி ஹோலிற்குள் 'தை தை' என்று ஆடினாள். ஒன்பது வயது.
"யானை வந்தது, காட்டு யானை வந்தது
தும்பிக்கையை ஆட்டி ஆட்டி யானை வந்தது"

என்னால் கார் வேகமாக ஓட முடியாது. முள்ளந்தண்டுப் பிரச்சினை. சீற்றில் இருப்பதுவும் கஸ்டம். விழா நடக்குமிடத்துக்கு நாங்கள் சென்றடைந்த போது மணி ஆறு முப்பது. காரை நிறுத்துவதற்கு இடம் இல்லாமலிருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒருமாதிரி தெருவில் இருந்த பஸ் தரிப்பு நிலையத்திற்கு சமீபமாக ஒரு குறுகலான இடம் கிடைத்துக் கொண்டது. மட்டுமட்டாக கோட்டைத் தழுவி நின்றது கார். றைவர் சீற்றிலிருந்து இறங்கும்போது வளையத்தையும் தூக்கிக் கொண்டேன். காற்று ஊதப்பட்ட வளையம், கார் குதித்துக் குதித்து ஓடும்போது 'சொக் அப்ஸோவ'ராகும். றைவர் சீற்றிற்குப் பக்கமாகவிருந்த சீற்றை சரித்துக் கொண்டு, நீட்டி நிமிர்ந்து கொண்டால் சுகமாக இருக்கும். மனைவியும் மகளும் இறங்கிக் கொண்டனர்.

"அப்பா! என்ர புறோகிறாம் இன்ரேவலுக்குப் பிறகுதான். வந்து எழும்பி நிண்டெண்டாலும்பாருங்கோ" போகும்போது மகள் சொல்லிவிட்டுப் போனாள்.
கொஞ்ச நேரத்தில் காரின் சூடு தணிந்து குளிர் பரவத் தொடங்கியது. தெருவிளக்குகள் அழுது வடிந்தன. ஒருசிலர் சோடிகளாகவும் தனித்தும் நடை பழகிக் கொண்டிருந்தனர்.
'இஞ்சை நடுச்சாமத்திலையும் அடை மழைக்கை குடையும் பிடிச்சுக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டு போவார்கள்.'

திடீரென்று ஒரு கார் பிறேக் போட்டு பக்கத்தில் வந்து நின்றது. அந்தக் கிரீச்சிட்ட சத்தம் இரவு நேரமாதலால் பயத்தை உண்டு பண்ணியது. யாராவது இளவட்டங்களாக இருக்கலாம். என்ன அவசரமோ? அது முன்னேறி பஸ் தரிப்பு நிலையமான - பிறை போல் வாரிவிட்ட நிலப்பகுதியை நோக்கி மெதுவாக ஊர்ந்து மையம் கொண்டது. ஒருவரும் அதிலிருந்து இறங்குவதாகத் தெரியவில்லை. மர்மமாக நின்றது. கள்ளர் காடையராகக்கூட இருக்கலாம். ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு இருந்த வேளையில், கார் பின்புறமாக நகரத் தொடங்கி வேகம் எடுத்தது. அப்படி ஒரு 'றிவேர்ஸ்' எடுப்பை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. நான் துலைந்தேன் என்று நினைப்பதற்கு முன், அது ஒரு மோதலுடன் முடிவுக்கு வந்தது. மனம் மூளைக்கு அனுப்பிய தந்தி போய்ச் சேருவதற்குள் அது நடந்துவிட்டது. காலதாமதமாகவே 'ஹோனை' அழுத்தினேன்.

மசாஜ்

பொழுது போகாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த குகனிற்கு - இடையில் அகப்பட்டது 'தவம் மசாஜ் சென்ரர். அந்த போர்ட்டைச் சுற்றியிருந்த 'நேயன்' விளக்குகள் விட்டு விட்டு ஒளிர்ந்து கண் சிமிட்ட, குகனின் கால்கள் வலிப்பு நோய் கண்டது போல உள் நுழைந்தன. 

மசாஜ் மசாஜ் என்று சொல்கின்றார்களே அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று தோன்றியது அவனிற்கு. சாஜரில் பூட்டிய பட்டரி போல அவனது மசாஜ் சாஜ் ஏறியது. மேலும் மலேசியா வந்த மூன்று நாட்களும் உடல் அசதியாக இருந்தது.

கவுண்டரில் வயது போன பெண்ணொருத்தி காதும் ரெலிபோனுமாக நின்றாள். 
'கிழட்டுக் கூட்டங்கள்' பின்வாங்க எத்தனிக்கையில், பத்துப் பன்னிரண்டு பெண்கள் அடங்கிய 'மெனுக் கார்ட்' ஒன்றை நீட்டினாள் அந்தப் பெண். 'லமினேற்' செய்யப்பட்ட அந்த மெனுக் கார்ட்டில் இருந்த அனைவருக்குமே இருபது இருபத்தைந்திற்குள்தான் இருக்கும். அப்படி செகசோதியாக ஜொலித்தார்கள்.

'நான் என்ன குடும்பம் நடத்தவா இங்கு வந்திருக்கிறேன்?' மனம் ஒருதடவை அப்படி யோசித்தாலும் - 'மசாஜ்' அந்த அழகிகளின் காலடியில் சறண்டராகலாம் என்றே சொன்னது. ஒருவேளை அது அவர்களின் தொழில் தர்மமோ?

'காசிலை குறியா இரு. கவிட்டுப் போடுவார்கள்' என்று படித்துப் படித்து குகனிற்குச் சொல்லியிருந்தார்கள் நண்பர்கள்.

"எவ்வளவு?"
"அரை மணித்தியாலம் 80 றிங்கிற்றுகள். பிறகு முடியவிட்டுத் தரலாம்."

பன்னிரண்டில்  மூன்றைத் தெரிவு செய்து தொட்டுக் காட்டினான் குகன். "நீ சரியான குறும்பு. மூன்றும் வேண்டும் என்கிறாய்" அந்தப்பெண் குகனின் முதுகில் செல்லமாகச் சீண்டினாள்.